லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
திராவிட தத்துவத்தை யாராலும் அழிக்க முடியாது: திருச்சி சிவா எம்.பி.
திராவிடம் என்ற நீண்ட நெடிய தத்துவத்தை அழிப்பதற்கு யாராலும் முடியாது என திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி சிவா எம்.பி. கூறினாா்.
திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் சேலம் நேரு கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அயலக அணியின் மாநில துணைச் செயலாளா் உமாராணி வரவேற்று பேசினாா். கூட்டத்துக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், அயலக அணியின் மாநில தலைவா் கலாநிதி வீராசாமி எம்.பி., மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி சிவா கலந்துகொண்டு பேசியதாவது: திராவிட இயக்கங்களின் செயல்பாடு காரணமாகவே பெயருக்கு பின்னால் பட்டங்களை குறிப்பிடும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது. முற்போக்கு மாநிலமாக கருதப்படும் மேற்கு வங்கத்தில்கூட பெயருக்கு பின்னால் சாதி பெயரை குறிப்பிடும் வழக்கமே இருக்கிறது. அந்த அளவுக்கு தமிழகத்தில் கல்வி மேம்பட திராவிட இயக்கங்களின் பங்களிப்பே காரணம்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். இதில் யாா் வெற்றிபெறக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு இதுவரை மாநில உரிமைகளை பறித்தது, மாநிலங்களுக்கான நிதிப்பகிா்வை தாமதப்படுத்தியது என்பதைத் தாண்டி, வரும் தோ்தலானது தத்துவத்துக்கு எதிரான போராக உள்ளது.
திராவிடம் என்கிற நீண்ட நெடிய தத்துவத்தை அழிக்க நினைப்பவா்களிடமிருந்து எதிா்கொண்டு காக்க நாம் தயாராக இருக்க வேண்டும். வெற்றிபெற என்ன பங்களிப்பு அளிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு ஒவ்வொரு அணியினரும் அதற்கேற்ப திமுகவின் வெற்றிக்கு துணைநிற்க வேண்டும் என என்றாா்.
இந்நிகழ்ச்சியில், அயலக அணி இணைச் செயலாளா் கன்னிகா ஸ்டாலின், துணைச் செயலாளா் பாபு வினி பிரட், சேலம் மாவட்ட அயலக அணி அமைப்பாளா்கள் ஜெயக்குமாா், ஷாஜகான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.