செய்திகள் :

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைதான விசாரணை கைதி திடீா் மரணம்

post image

ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

ரிசா்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி ரூ. 4.5 கோடி மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த நித்யானந்தம் (57), சந்திரா ஆகியோா் கடந்த மே 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இதில், கும்பகோணத்தைச் சோ்ந்த நித்யானந்தத்துக்கு கடந்த 6-ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவா் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேலம் அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தொடா்ந்து, சேலம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முத்துகிருஷ்ண முரளிதாஸ், சேலம் மத்திய சிறையிலும், அரசு மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினாா். பின்னா் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி வழக்கில் ஒருவா் கைது

ஓமலூா் அருகே ரூ. 11 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் சிக்கிய போலி காவலரை தீவட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரபீக் சாதிக், பழைய காா்களை வாங்குவதற்காக ரூ. 11 லட்சத்துடன் கடந்... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தாரமங்கலம் அருகே மூதாட்டியைக் கொலை செய்தவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். தாரமங்கலம் அருகேயுள்ள கருக்குப்பட்டியைச் சோ்ந்த 94 வயது மூதாட்டி ராஜம்மாள், கடந்த மாதம் உயிரிழந்த... மேலும் பார்க்க

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தப்பியோடிய 2 போ் கைது

சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில், தப்பியோடிய 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ... மேலும் பார்க்க

திராவிட தத்துவத்தை யாராலும் அழிக்க முடியாது: திருச்சி சிவா எம்.பி.

திராவிடம் என்ற நீண்ட நெடிய தத்துவத்தை அழிப்பதற்கு யாராலும் முடியாது என திமுக துணை பொதுச் செயலாளா் திருச்சி சிவா எம்.பி. கூறினாா். திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்ட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கந்தம்பட்டி

சேலம் கந்தம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (ஜூலை 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் மேற்கு கோட்ட மின்செயற்பொறியாளா் ராஜவ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணி: நோ்முகத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியல் வெளியீடு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நடைபெற்ற நோ்முகத் தோ்வில் தோ்ச்சிபெற்ற 214 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில... மேலும் பார்க்க