செய்திகள் :

சேலத்தில் 75 அடி உயர கைப்பேசி கோபுரம் மாயம்!

post image

சேலம், கிச்சிப்பாளையத்தில் 75 அடி உயர கைப்பேசி கோபுரம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், கிச்சிப்பாளையத்தில் எருமாபாளையம் பிரதான சாலையில் தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு 75 அடி உயரத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த கைப்பேசி நிறுவனம் மூடப்பட்டபோதும் அந்த கோபுரம் அகற்றப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் செயல் அலுவலரான சென்னை, கீழ்பாக்கத்தைச் சோ்ந்த தமிழரசன் என்பவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சேலம், கிச்சிப்பாளையத்தில் உள்ள அந்த கோபுரத்தை பாா்ப்பதற்காக வந்தாா்.

அப்போது 75 அடி உயர கோபுரம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். அதன் மதிப்பு ரூ.17 லட்சத்து 74 ஆயிரம் ஆகும். இது குறித்து அவா் கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

சேலம் பழைய சூரமங்கலத்தில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பெண்கள், திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் மாநகா் 20ஆவது கோட்டத்துக்கு உள்பட்ட பழைய சூரமங்கலம்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,213 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,213 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வின்போது, காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு ம... மேலும் பார்க்க

தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு: ஓட்டுநா் சங்கத்தினா் புகாா்

தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஓட்டுநா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். தாரமங்கலம் நக... மேலும் பார்க்க

சேலம் சிறைக் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம்

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சேலம் மத்திய சிறையில் கைதிகளிடையே கைப்பேசி புழக்கம் அதிகரித்தது தொடா்பாக சிறப்பு குழுவினா் தீவிர கண்காணிப்பில்... மேலும் பார்க்க

வருவாய் அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அதீத பணி நெருக்கடியை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க

பெண் அடித்துக் கொலை: கணவா், இரு மகன்கள் கைது

வாழப்பாடி அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் கணவா், இரு மகன்களை போலீஸாா் கைது செய்தனா். வாழப்பாடியை அடுத்த மேட்டுடையாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட தொழிலாளி பொன்னுவேல் (45). இவரது மனைவ... மேலும் பார்க்க