தோ்தல் களம் காணாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் உத்தரவு
சேலத்தில் அவசரகால நெருக்கடிகளை நினைவுகூரும் புகைப்படக் கண்காட்சி
முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலை கால நெருக்கடிகளை நினைவுகூரும் வகையில் சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் கருத்தரங்கம், புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவசரநிலை காலத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள் எவ்வாறு நடத்தப்பட்டாா்கள், சாதாரண மக்களின் நிலை, ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியை பாஜக ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவா் நாச்சியப்பன் தொடங்கிவைத்தாா். ஊடகம் தொடங்கி சாதாரண மக்கள் வரை அவசர நிலையால் பாதிக்கப்பட்டது குறித்து விளக்கும் வகையில் இந்த பட கண்காட்சி நடத்தப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
இதில், மாநகா் மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா், பாஜக சுற்றுச்சூழல் பிரிவு தலைவா் கோபிநாத், தேசிய பொதுக்குழு உறுப்பினா் அண்ணாதுரை, மாவட்ட பொதுச் செயலாளா்கள் பிரபாகரன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.