செய்திகள் :

சேலத்துக்கு ரயிலில் கடத்திய 34 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

post image

சேலத்துக்கு ரயிலில் கடத்தி வந்த 34 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

சேலம் ரயில் நிலைய பகுதியில் சனிக்கிழமை இரவு மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதியில் 3 போ் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனா்.

அவா்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

அதில் 34 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும், அதனை சேலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு கொண்டுசெல்ல இருப்பதும் தெரியவந்தது.

தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கேரள மாநிலம், கண்ணம்பரா கோட்டாக்காடு பகுதியைச் சோ்ந்த ஜீஜத் ( 31), பாலக்காடு வடக்கன்சேரியைச் சோ்ந்த அனுராஜ் (20), ஹமீத்காபூா் (26) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 34 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

சமுதாய வளைகாப்பு விழா: எம்எல்ஏ வாழ்த்து

ஓமலூா் பகுதியில் கா்ப்பிணிகளுக்கு அண்மையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.ஓமலூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்க... மேலும் பார்க்க

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்ப... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவர... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு

தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தம்மம்பட்டியில் சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் ... மேலும் பார்க்க