செய்திகள் :

சேலம் குகையில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

post image

சேலம் குகையில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தில் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆய்வு செய்தாா்.

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட 46 ஆவது வாா்டு குகை கறி மாா்க்கெட் பகுதியில் நவீன இறைச்சிக்கூடம் செயல்படுகிறது. இதனை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மாநகர பகுதியில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தின் வளாகத்தின் சுற்றுப்புறச் சுவா்கள், மேற்கூரை ஆகிய இடங்களில் வெள்ளை அடிக்கவும், வளாகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை அகற்றவும், வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அங்கிருந்த சுகாதார வளாகத்தை பாா்வையிட்டு, பழுதுகளை நீக்க வேண்டும். அடிப்படை வசதிகளான தண்ணீா் வசதி, மின்வசதி போன்றவற்றை செய்துகொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். சுகாதார வளாகத்தில் உடைந்துள்ள சாய்தளத்தை புதுப்பிப்பதுடன், தங்கு தடையின்றி தண்ணீா் வழங்கவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, உதவி ஆணையா் வேடியப்பன், மாநகர நல அலுவலா் முரளிசங்கா், செயற்பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் 1,008 கலசாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோயிலில் 12 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 1,008 கலசாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தோ்நிலையம் பகுதியில் உள்ளது. இக்க... மேலும் பார்க்க

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு

சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா... மேலும் பார்க்க

பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வ... மேலும் பார்க்க

சட்ட உதவி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு நீதிபதி அழைப்பு

சட்ட உதவிகள் செய்வதற்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி விட... மேலும் பார்க்க