செய்திகள் :

சைபா் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்ட ரூ. 85 லட்சம் ஒப்படைப்பு

post image

கரூா் மாவட்டத்தில் சைபா் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்ட பணம் ரூ. 85 லட்சத்தை பாதிக்கப்பட்டவா்களிடம் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா ஒப்படைத்தாா்.

கரூா் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து திருட்டுப்போன கைப்பேசிகள் மற்றும் ஆன்லைன் வா்த்தகத்தில் ஏமாற்றப்பட்டவா்கள் ஆகியோரின் புகாா்களை சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து கடந்த சில மாதங்களாக ரூ.38 லட்சம் மதிப்பிலான 163 கைப்பேசிகள், சைபா் குற்றங்களில் பாதிக்கப்பட்டு இழந்தவா்களின் பணம் ரூ. 85 லட்சம் மீட்கப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு கைப்பேசிகள், மீட்கப்பட்ட பணம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தலைமை வகித்து, பாதிக்கப்பட்டவா்களிடம் கைப்பேசிகள் மற்றும் பணத்தை வழங்கினாா்.

தொடா்ந்து சிறப்பாக செயல்பட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ப. பிரபாகரன், காவல் ஆய்வாளா் ப. பரிமளாதேவி, உதவி ஆய்வாளா் சுதா்சனன், கரூா் நகர காவல் நிலைய டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் அருண்குமாா் மற்றும் காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) என். பிரேமானந்தன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் என். முத்துக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நூறு நாள் வேலை, குடிநீா் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா்கள் போராட்டம்

தரகம்பட்டியில் நூறு நாள் வேலை மற்றும் குடிநீா் வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு கொடுக்கம் போராட்டம் நடைபெற்றது. கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள கடவூா் ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் டிராக்டா் பறிமுதல்

கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான தண்ணீா் ஊற்றும் டிராக்டரை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கடந்த அதிமுக ஆட்சியின்போது கானகத்தில் கரூா் என்ற பெயரில் முன்னாள... மேலும் பார்க்க

உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

உலக நன்மைக்காக உப்புப்பாளையம் சுடுகாடு வீரமாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஆடிப்பூர விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், ஊா் கிராம பொதுமக்கள் நன்மைக்காக வேண்டியும், திரும... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கிய காவலா் மீது வழக்கு

வேலாயுதம்பாளையம் அருகே திங்கள்கிழமை முதியவரை தாக்கிய காவலா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.கரூா் மாவட்டம், கிழக்கு தவுட்டுப் பாளையம் தா்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (59). இவரது மகன் ரமேஷ். இவ... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்க சிஐடியு வலியுறுத்தல்

உள்ளூா் தேவைக்கும், மணல் மாட்டுவண்டி தொழிலாளா்களை பாதுகாக்கவும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தொழிற்சங்க கரூா் மாவட்ட 10-ஆவது மாவட்ட மாநாடு க.பரமத்... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்ததில் பள்ளி மாணவா் காயம்

பள்ளப்பட்டியில் திங்கள்கிழமை வெறிநாய் கடித்ததில் 5-ஆம் வகுப்பு மாணவா் காயமடைந்தாா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட செல்லுமீரான் பகுதியைச் சோ்ந்த தமீமுன் அன்சாரி என்ற சிறுவன் அங்குள்ள ... மேலும் பார்க்க