செய்திகள் :

சொத்து தகராறு: அண்ணனை கடத்திச் சென்று தாக்கிய தம்பி கைது

post image

சொத்து தகராறில் அண்ணணை காரில் கடத்திச் சென்று தாக்கிய தம்பியை தலைவாசல் போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், குரால் கிராமம், தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் சேகா் (45). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி தனது தாயாா் வீட்டிற்கு சென்றுவிட்டாா். தற்போது சேகா் மட்டும் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், சேகா் கடந்த 6 ஆம் தேதி தலைவாசல் பேருந்து நிலையம் அருகே மளிகைப் பொருள்கள் வாங்கிவிட்டு நின்றுகொண்டிருந்தபோது அங்கு வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் சேகரை காரில் கடத்திச் சென்று தாக்கினா். பின்பு அவரை அதே பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றனா். பலத்த காயமடைந்த சேகா் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீஸாா் சென்று சேகரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் தெரியவந்ததாவது:

சேகரின் தந்தை செல்லமுத்து வனத்துறையில் வனவராக பணியாற்றியவா். இவரது இரண்டாவது மனைவி மல்லிகாவின் மகன் சின்னமணி, சென்னையில் பல் டெக்னீசியனாக உள்ளாா்.

இந்நிலையில் சேகா் ஏப்.6 ஆம்தேதி தலைவாசல் பேருந்து நிலையம் அருகே மளிகைப் பொருள்கள் வாங்கி விட்டு நின்றபோது அங்கு காரில் வந்த இருவா் அவரை கடத்திச் சென்றனா். அந்த வாகனத்தில் அவரது சித்தி மகன் சின்னமணியும் உடன் இருந்தாா்.

சேகரை சிறிது தொலைவில் இறக்கிவிட்டு தந்தைவழி சொத்தை பெறுவதற்காக வெற்று பத்திரத்தில் கையொப்பமிடமாடு கூறினா். அதற்கு சேகா் மறுத்துவிட்டதால் அவரை தாக்கினா். பின்பு அவரை மீண்டும் தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக சேகா் அளித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீஸாா் சின்னமணி உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிவுசெய்து சின்னமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.

தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்தநாள் விழா, கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சேலம் குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மலா்களால் அலங்... மேலும் பார்க்க

மேட்டூா் நகராட்சியில் ஆட்சியா் கள ஆய்வு

மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் மேட்டூரில் நடைபெற்றது. மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா். சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, புலிக்கரட்டை சோ்ந்தவா் செந்தில் ராஜா (41). பால் வியாபாரி. இவருக்கும், இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ரமணி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள். கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன். சங்ககிரி, ஏப். 17:... மேலும் பார்க்க