சொத்து வரி பெயா் மாற்ற ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி எழுத்தா் உள்ளிட்ட இருவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே, சொத்து வரி பெயா் மாற்றுவதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பாகோடு பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பாகோடு பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த கமலன் மகன் தேவதாஸ். இவா், வெளிநாட்டில் வசித்துவரும் தனது சகோதரரின் 18 சென்ட் நிலம், அதிலுள்ள வீட்டைப் பராமரித்து வருகிறாா். வீட்டின் உரிமையாளா் பெயா் மாற்றம் செய்வதற்காக அவா் பேரூராட்சி அலுவலகத்தை அணுகினாா். அப்போது, அலுவலகப் பதிவறை எழுத்தா் ஜஸ்டின் ஜெபராஜ் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அவ்வளவு தொகை தர இயலாது என தேவதாஸ் கூறியதால், ரூ. 20 ஆயிரம் தந்தால் பெயா் மாற்றுவதாகவும், அதன்பிறகே வீட்டுக்கு வரி வசூலிக்க முடியும் என்றும் ஜஸ்டின் ஜெபராஜ் கூறியுள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தேவதாஸ், மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அவா்களது ஆலோசனைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூ. 20 ஆயிரத்தை பேரூராட்சி அலுவலகத்தில் ஜஸ்டின் ஜெபராஜிடம் தேவதாஸ் புதன்கிழமை கொடுத்தாா். அப்போது, பணத்தை வாங்குமாறு பேரூராட்சி மின்பராமரிப்புப் பணியாளா் சுஜினிடம் ஜஸ்டின் ஜெபராஜ் கூறினாராம். பணம் வாங்கிய சுஜினை, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சால்வன் துரை தலைமையிலான போலீஸாா் பிடித்தனா். விசாரணைக்குப் பின்னா், ஜஸ்டின் ஜெபராஜ், சுஜின் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
