செய்திகள் :

சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடியவர் முதல்வர் ஸ்டாலின்: கி. வீரமணி

post image

சென்னை: உலகம் பாராட்டக்கூடிய அளவிற்கு, உலகம் அதிசயப்படக்கூடிய அளவிற்கு பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

சென்னை பெரியமேடு ரிப்பன் மாளிகையில் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயரின் 174 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும் கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

திராவிடர் இயக்கத்தை குழி தூண்டி புதைத்து விட்டோம் என்று அந்த காலத்தில் கொக்கரித்தவர்களுக்கு எல்லாம் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் அருமையாக பதில் சொன்னார்கள்.

பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஆட்சி ஏதோ புதிய ஆட்சி கிடையாது, நீதிக் கட்சி என்ற திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சி என்று அண்ணா சொன்னார்.

அந்த வழியில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

எவ்வளவோ சோதனைகள் இருந்தாலும் கூட சோதனைகள் அனைத்தையும் தாண்டி சாதனைகளை நாள்தோறும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.

உலகம் பாராட்டக்கூடிய அளவிற்கு, உலகம் அதிசயப்படக்கூடிய அளவிற்கு பல்வேறு சாதனைகளை முதல்வர் ஸ்டாலின் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். யாரையெல்லாம் பாராட்ட வேண்டுமோ, திராவிடர் இயக்க வழி வந்தவர்களை அனைவரையும் இந்த அரசு நினைவு கூறுகிறது, அவர்களின் பெயரால் பல்கலைக்கழகங்களை அமைக்கிறார்கள் என்று கூறினார்.

திராவிடக் கொள்கைகள் ஆரியத்தை உறுத்துகிறது. இதனைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத சோதனைகளை நடத்துகிறார்கள். எதை நடத்தினாலும் திராவிடத்தை அசைக்க முடியாது.

மக்கள் ஆதரவு இல்லாமல் குறுக்கு வழியில் ஒரு பெரிய திட்டத்தை அமல்படுத்தலாம் என்று வியூகத்தை பயன்படுத்த நினைக்கிறார்கள். அதற்கு ஆளுநர் பயன்படுகிறார். நிதி சுமை நெருக்கடியை உருவாக்குகிறார்கள், அமைச்சர்கள் மீது எப்போதோ நடந்த செய்திகளை எல்லாம் இப்போது தூசி தட்டி எடுத்து பெரிய அளவில் ஊழல் நடந்ததாக புதிய கதைகளை எல்லாம் உருவாக்குகிறார்கள்.

எதையும் உள்வாங்கிக் கொண்டு எதிர்நீச்சல் அடிக்கக் கூடிய இயக்கம் திராவிடர் இயக்கம்.

திராவிடக் கொள்கைகள் ஆரியத்தை உறுத்துகிறது. அதனால் சோதனைகளை நடத்துகிறார்கள் எதை நடத்தினாலும் திராவிடத்தை அசைக்க முடியாது என்று வீரமணி கூறினார்.

நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி

நாட்டிற்கே முன்னோடியாக திராவிட மாடல் திட்டங்கள் திகழுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ம... மேலும் பார்க்க

ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

சேலம்: ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் சமூக ஆா்வலா் சுட்டுக்கொலை

ஸ்ரீநகா்: பஹல்காம் தாக்குதலுக்கு நான்கு நாள்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆா்வலா் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப... மேலும் பார்க்க

41 தலிபான்கள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவம்

பெஷாவா்: ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபோது பாகிஸ்தான் ராணுவத்தினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) குழுவைச் சேர்ந்த 41 ... மேலும் பார்க்க

தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (92) உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சென்னை கோபாலபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது: துணை முதல்வர் உதயநிதி

கோவையில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த தமிழக துணை முதல்வர் உதயநிதி, மகளிருக்கான திட்டங்களால் நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது என... மேலும் பார்க்க