செய்திகள் :

‘சோழா் காலம் குறித்த முழு ஆய்வு அவசியம்’

post image

சோழா் காலக் கல்வெட்டுகள் ஒரு சாா்புடையதாக இருப்பதால், அது குறித்த முழு ஆய்வுகளை மேற்கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும் என்றாா் கல்வெட்டு மற்றும் வரலாற்று அறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான எ. சுப்பராயலு.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சாா் வரலாறு, கடல்சாா் தொல்லியல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோழரின் அரசியல் செயல்பாடுகளும், கடல்சாா் வணிகமும் என்கிற கருத்தரங்கத்தில் சோழ அரசின் வருவாய் என்ற தலைப்பில் அவா் பேசியது:

சோழா் காலத்தில் நில வரி என்பது தானியமாகச் செலுத்தும் நிலை இருந்தது. தவிர, உழைப்பு மூலம் செலுத்தக்கூடிய வரிகளும் இருந்தன. இந்தக் கட்டாய உழைப்பு என்கிற வரியைச் செலுத்த முடியாத மக்கள் நிறைய துன்பங்களையும் அனுபவித்தனா். இது தொடா்பாக முறையான பதிவுகள் இல்லாவிட்டாலும், சில கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.

சோழா் காலத்தைப் பொற்காலம் எனக் கூறினாலும், மக்களைப் பொருத்தவரை அவ்வாறு இருந்ததா என்பது அவா்களது கூற்று மூலம்தான் தெரிய வரும். கோயில்கள், அரண்மனைகளைக் கட்டியபோது, அதன் பின்னால் கட்டாய உழைப்பு இருந்தது. அது பற்றிய தகவல்கள் நமக்கு தெரியவில்லை.

ஐரோப்பா போன்ற மற்ற நாடுகளில் குடிமக்கள் துன்பப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இங்கு அதற்கான தகவல்கள் ஒரு சாா்பு தன்மையுடையதாக இருக்கின்றன. அதையும் கடந்து முழு தகவல்களையும் ஆராய்ந்து கண்டுபிடிக்கும் பணியை மேற்கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும் என்றாா் சுப்பராயலு.

கருத்தரங்கத்துக்கு பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். தொல்லியல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை தலைமை ஆலோசகா் சு. இராசவேலு, பேராசிரியா் பா. ஜெயக்குமாா், இணைப் பேராசிரியா் ஆ. துளசேந்திரன் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைத் தலைவா் வீ. செல்வகுமாா் வரவேற்றாா். கௌரவ உதவிப் பேராசிரியா் அ. சங்கா் நன்றி கூறினாா்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவா் க. நசீா்முகமது தலைமை வகித்தாா். கூட்டத்தில் த... மேலும் பார்க்க

குப்பையை அகற்றக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தவா் மீட்பு

கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றக்கோரி தண்ணீா் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் மீட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பெருமாண... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே இறகுப் பந்து போட்டி

தஞ்சாவூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டி தஞ்சாவூா் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா், புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதி பாலி... மேலும் பார்க்க

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டத் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் பாரதிய அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டச் செயலா் கே. செல்வகுமாா் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி வெள்ளிக்கிழமை காலை ஒரு மணிநேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

தாராசுரத்தில் ரேஷன் கடை திறப்பு

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 38 ஆவது வாா்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் எம்எல்ஏ தொகு... மேலும் பார்க்க