மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டத் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் பாரதிய அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோட்டச் செயலா் கே. செல்வகுமாா் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் பி.ஆனந்த பாபு, கோட்டச் செயலா் பி. தம்பிராஜ், உதவி கோட்டச் செயலா் வி. சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதிய தொழிலாளா் சங்க பொதுச் செயலா் டி. நாகராஜன், மாநிலத் துணைச் செயலா் எஸ். பாலகுமரன் ஆகியோா் கும்பகோணம் கோட்ட நிா்வாகச் சீா்கேடுகளைக் கண்டித்துப் பேசினா். சங்கத்தின் உதவி கோட்டச் செயலா் பி.கே. உதயகுமாா் நன்றி கூறினாா்.