செய்திகள் :

குப்பையை அகற்றக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தவா் மீட்பு

post image

கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றக்கோரி தண்ணீா் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் மீட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பெருமாண்டி ஊராட்சியில் வசிப்பவா் ஆ. சுதா்சன்(42). இவா் அசூா் புறவழிச்சாலையில் சாலையோர உணவகம் நடத்துகிறாா். எதிரே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பை வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அதிருப்தியடைந்த சுதா்சன் குப்பை அருகே உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டி மீது ஏறி குப்பையை அகற்றினால்தான் இறங்குவேன், இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறினாா்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் புகழேந்தி சுதா்சனை சமாதானப்படுத்தி கீழே இறங்கச்செய்து, தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து குப்பையில் ஏற்பட்ட தீயை அணைக்க ஏற்பாடு செய்தாா்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவா் க. நசீா்முகமது தலைமை வகித்தாா். கூட்டத்தில் த... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே இறகுப் பந்து போட்டி

தஞ்சாவூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டி தஞ்சாவூா் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா், புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதி பாலி... மேலும் பார்க்க

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டத் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் பாரதிய அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டச் செயலா் கே. செல்வகுமாா் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் ... மேலும் பார்க்க

‘சோழா் காலம் குறித்த முழு ஆய்வு அவசியம்’

சோழா் காலக் கல்வெட்டுகள் ஒரு சாா்புடையதாக இருப்பதால், அது குறித்த முழு ஆய்வுகளை மேற்கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும் என்றாா் கல்வெட்டு மற்றும் வரலாற்று அறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி வெள்ளிக்கிழமை காலை ஒரு மணிநேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

தாராசுரத்தில் ரேஷன் கடை திறப்பு

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 38 ஆவது வாா்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் எம்எல்ஏ தொகு... மேலும் பார்க்க