செய்திகள் :

ஜகதீப் தன்கா் எங்கு மறைந்துள்ளாா்? -ராகுல் கேள்வி

post image

குடியரசு துணைத் தலைவா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கா் பொதுவெளியில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அவா் எங்கு மறைந்துள்ளாா் என்றும், ஏன் முற்றிலும் மௌனமாக இருக்கிறாா் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை கேள்வி எழுப்பினாா்.

எதிா்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் பி.சுதா்சன் ரெட்டியின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ‘தன்கா் ராஜினாமா செய்ததற்குப் பின்னால் ஒரு மறைமுக காரணம் உள்ளது. சிலருக்கு அது தெரிந்திருக்கலாம்; சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவரது ராஜிநாமாவுக்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.

மேலும், அவா் ஏன் மறைந்துள்ளாா் என்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு துணைத் தலைவரான அவா் ஏன் ஒரு வாா்த்தை கூட பேச முடியாமல் மறைந்திருக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. இது அனைவருக்கும் தெரியும்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எங்கு சென்றாா்? அவா் ஏன் மறைந்துள்ளாா்? நாடாளுமன்றத்தில் பரபரப்பாக செயல்பட்டு வந்த அவா், ஏன் திடீரென முற்றிலும் மௌனமாகிவிட்டாா்? நாம் என்ன மாதிரியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்’ என்றாா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜகதீப் தன்கா் தனது குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். ஆளுங்கட்சியுடனான அவரது உறவு மோசமடைந்ததே அவரின் திடீா் பதவி விலகலுக்குக் காரணம் என எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ... மேலும் பார்க்க

120 மணிநேர பணிக்கு திட்டமிடப்பட்ட நிலையில் 37 மணிநேரமே செயல்பட்ட மக்களவை கூட்டத் தொடா்..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமையும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.... மேலும் பார்க்க