செய்திகள் :

ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள்: கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளாலே முடக்கம்! -அமைச்சர் கிரண் ரிஜிஜு

post image

ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன. அமளியால் மழைக்கால கூட்டத் தொடரில் 21அமா்வுகளில், மக்களவையில் 120 மணிநேர பணிக்கு திட்டமிடப்பட்ட நிலையில், வெறும் 37 மணிநேரம் 7 நிமிஷங்களே செயல்பட்டுள்ளது. மாநிலங்களவை 41 மணிநேரம் 15 நிமிஷங்களே செயல்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து, நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிடுகையில்: "அரசு எதிர்க்கட்சிகள் கருத்துகளையும் கேட்டே செயல்படும். ஆனால், ஒருபோதும் நாட்டின் நலன் சார்ந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளாது.

நாட்டின் பாதுகாப்புக்காக உழைக்கிறோம் நாங்கள். நீங்கள் (எதிர்க்கட்சிகள்) சிறப்பு தீவிர திருத்தம் (பிகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்) குறித்து அறிவீர்கள். நாடாளுமன்றச் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் அதிகமாக முடக்கியுள்ளன.

நாங்கள் ஜனநாயக மாந்தர்கள்; ஜனநாயக முறையிலேயே செயல்படுகிறோம். ஆகையால், கூட்டத்தொடரின் முதல் 3 வாரங்களில் நாங்கள் எந்தவொரு மசோதாவையும் தாக்கல் செய்யவில்லை.

நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டுமென்பதை எதிர்க்கட்சிகளிடம் ஒவ்வொரு நாளும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசு ஒரு முக்கியமான மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படியிருக்கையில், விவாதத்தில் பங்கேற்று கருத்துகளை வழங்கி உங்கள் தரப்பு பங்களிப்பை வழங்குங்கள்.

எதிர்க்கட்சிகளிடமிருந்தும் கருத்துகளைக் கேட்க நாங்கள் விருப்பப்படுகிறோம். அவர்களிடம் திரும்பத்திரும்ப நாங்கள் வலியுறுத்திவிட்டோம், ஆனால் அவர்கள் அதனைக் கேட்பதாயில்லை” என்றார்.

Minister of Parliamentary Affairs and Minister of Minority Affairs, MP from Arunachal Pradesh Union Minister Kiren Rijiju: "Will listen to opposition but won't compromise with national interests”

வாக்குத் திருட்டு விவகாரம்: வீடுவீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராக காங். பிரசாரம்!

ஹைதராபாத்: வாக்குத் திருட்டு விவகாரத்தில் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் இன்று(ஆக. 23) ஈடுபட்டனர்.கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜார்க்கண்டின் ராஞ்சியில் நியூ மார்க்கெட் சௌக் அருகே பேருந்தில் இருந்து காரில் மாற்றப்பட்டபோத... மேலும் பார்க்க

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.புது தில்லியில் நடைபெற்றதனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய ... மேலும் பார்க்க

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மு... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக. 23) ஆலோசனை மேற்கொண்டார்.குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்ப... மேலும் பார்க்க