செய்திகள் :

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே

post image

ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜகவுடன் கைகோத்து, தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சில சான்றுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அரசமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் பலவற்றை சுட்டிக்காட்டி, ராகுலின் குற்றச்சாட்டை மறுத்தார்.

மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து 7 நாள்களுக்கு ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பிக்களும் கலந்துகொண்ட நிலையில், கைகளில் பிரமாணப் பத்திரங்களுடன் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக காணொலியை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் கார்கே பதிவிட்டிருப்பதாவது:

”தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்பு கடமையை விட்டுக்கொடுத்து, அரசியல் கட்சிகளின் உண்மையான கேள்விகளைத் தவிர்க்க முடியாது.

'வாக்களிக்கும் உரிமை' என்பது இந்திய அரசியலமைப்பால் நமக்கு வழங்கப்பட்ட மிக முக்கியமான உரிமையாகும்.

ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Congress leader Mallikarjun Kharge said on Monday, INDIA will oppose any attempt to suppress democracy.

இதையும் படிக்க : இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தார்.மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலை... மேலும் பார்க்க

டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று (ஆக. 18) பேசினார். இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கடந்த வாரம் நடத்திய ஆலோசனையின் மதிப்பீடுகள் குறித... மேலும் பார்க்க

‘பாஜக கைகளில் இருக்கும் பொம்மை’: தேர்தல் ஆணையம் மீது மஹுவா மொய்த்ரா எம்.பி. சாடல்!

தேர்தல் ஆணையமே ‘பாஜகவின் கைகளில் இருக்கும் பாவை போலச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தை விமர்சித... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

கேரளத்தில் வாக்கு முறைகேடு குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியினரை குரங்குகள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கேரள மாநிலத்தின் திரிசூரில் உள்ள சக்தன் தம்புரான் ச... மேலும் பார்க்க

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.வானிலை மையத்தின... மேலும் பார்க்க

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வே... மேலும் பார்க்க