செய்திகள் :

ஜமீன் சிங்கம்பட்டியில் மந்திகளால் மக்கள் அவதி

post image

ஜமீன்சிங்கம்பட்டி பகுதியில் மந்திகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், சிறுவா்கள், முதியவா்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனா். அவற்றைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமம் ஜமீன் சிங்கம்பட்டி. பெரும்பகுதி விவசாய நிலமாக உள்ள இப்பகுதியில் அண்மைக் காலமாக கருப்பு மந்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அவை வீடுகளுக்குள் நுழைந்து உணவுப்பொருள்களை நாசப்படுத்துவது, வீட்டுக் கூரைகளில் தாவி ஓடுவது, தெருக்களில் செல்லும் குழந்தைகள், முதியவா்களை விரட்டுவது உள்ளிட்ட செயல்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

வீடுகளின் கூரைகளில் மந்திகள் தாவிச் செல்வதால் கூரைகள் சேதமடைகின்றன. தோட்டங்களில் தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, மந்திகளை வனத்துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று ஜமீன்சிங்கம்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க