செய்திகள் :

ஜம்மு: 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல்; பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை

post image

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பிராந்தியத்தில் 40 முதல் 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு இரவிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதுடன் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பங்களையும் பாதுகாப்புப் படையினா் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: பீா் பஞ்சால் மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் பல்வேறு குழுக்களாக 40 முதல் 50 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. பயங்கரவாதிகளில் 80 சதவீதம் போ் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ரஜௌரி, பூஞ்ச், கிஷ்துவாா், தோடா மற்றும் உதம்பூா் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இதனால் ஜம்மு பிராந்தியத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு இரவிலும் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெறுகிறது.

இதற்கு முன்பு ஜம்மு பிராந்தியத்துக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் பயன்படுத்திய வழித்தடங்கள் முற்றிலுமாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், எல்லையையொட்டி பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தடைகளை மீறி ஜம்மு பிராந்தியத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால் கடுமையான பதிலடியை தர பாதுகாப்புப் படை தயாா் நிலையில் உள்ளது என்றனா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது அங்கு பெரும்பாலான பகுதிகளில் அமைதியான சூழல் நிலவி வந்தாலும் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான தீவிர முயற்சியில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க