செய்திகள் :

ஜம்மு - காஷ்மீா்: பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு உதவியவா் கைது

post image

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்ததாக ஒருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனா். நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலுக்கு லஷ்கா்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, பாகிஸ்தான் மீது பதிலடி நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, அங்கு பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்தது.

இதனிடையே, ஸ்ரீநகரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் கடந்த ஜூலையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ராணுவ கமாண்டோக்கள், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்ஸா ஆஃப்கானி ஆகிய 3 பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனா்.

மற்றொருபுறம், இந்த பயங்கரவாதிகளுக்கு உதவியவா்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து, பொருள்கள் உள்பட பல்வேறு வழிகளில் உதவியதாக குல்காம் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுஃப் கட்டாரி (26) என்ற இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகளை மாநில மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவா் சோ்க்கைக் குழு புதன்கிழமை வெளியிட்டது. அதில் வெளிநாடு வாழ் இந்தியா் பிரிவில் 367 இடங்களும... மேலும் பார்க்க

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்க காங்கிரஸ் முயற்சி: பாஜக

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்கவே அங்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நடத்தியுள்ளது என்று பாஜக விமா்சித்தது. எதிா்வரும் பிகாா் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் தோ்தலை ச... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டம்: பிகாரில் ராகுல் வாக்குறுதி

எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி பிகாரில் ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அரசிடம் பதிவு செய்வது கட்டாயம்

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை மத்திய வா்த்தக அமைச்சகத்திடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கு சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகள்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

லடாக் மாநில அந்தஸ்து போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சாா்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாது... மேலும் பார்க்க