செய்திகள் :

ஜார்க்கண்ட்: ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - பயணிகள் மயக்கம்!

post image

ராஞ்சி : கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையங்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 18 பேர் சனிக்கிழமை இரவு பலியாகினர். இந்த அசம்பாவிதம் நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் நிலையங்களி பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது.

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை(பிப். 16) பயணிகள் அதிகமானோர் திரண்டிருந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக, பயணிகள் சிலர் மயக்கமடைந்து விழுந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கமடைந்த 5 பயணிகளுக்கும் மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் உடல்நிலை சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது ராஞ்சியில்? ராஞ்சியிலிருந்து தில்லிக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் செல்ல அதிகமான பயணிகள் ராஞ்சி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(பிப். 16) மாலை திரண்டிருந்தனர். அப்போது ஜார்க்கண்ட் சுவர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (12817) ரயில் அங்கு வந்தடைந்தது. அதில் ஏற்கெனவே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில், ராஞ்சி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் அந்த ரயிலில் ஏற முற்பட்டபோது, டிக்கெட் எடுக்காமல் அந்த ரயிலில் ஏறிக்கொண்ட பயணிகள் சிலர் பெட்டிகளின் கதவுகளை மூடியதுடன் திறக்க முடியாதபடி பூட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்னொருபுறம், டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏற காத்திருந்த பயனிகளுக்கு இது பெரும் தலைவலியாக உருவெடுத்தது. அவர்களால் அந்த ரயில் பெட்டிகளில் ஏற முடியவில்லை.

இந்த பரபரப்பான சூழலில், ஒருசில குடும்பங்களில், சிலர் ரயிலில் ஏறிவிட்டனர் எனினும், பிறர் ஏற முடியாமல் தவித்தனர். ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ரயில் கதவுகளை திறக்க முயற்சிப்பதற்குள் ரயில் புறப்படத் தயாரானது. நல்வாய்ப்பாக எவ்வித உயிர்சேதமும் காயமோ யாருக்கும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, ரயிலில் ஏற்கெனவே உள்ள பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து டிக்கெட்டுகள் வழங்குமாறு ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க