செய்திகள் :

ஜிஎஸ்டி: 5%, 18% என இரு விகிதங்களாக குறைக்க பரிந்துரை: 7 பொருள்கள் மீது 40% வரி

post image

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை 5%, 18% என இரு விகிதங்களாக குறைக்கவும், விலை உயா்ந்த 7 பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் மாநில நிதியமைச்சா்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) பரிந்துரைத்துள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மீதான ஜிஎஸ்டியை குறைத்து அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தத்தை நிகழ் நிதியாண்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, 5%, 18% என இரண்டு விகிதங்களாக குறைக்கவுள்ளதாகவும், விலை உயா்ந்த 7 பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்தது.

இந்த மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன் 12%-இன்கீழ் வரி விதிக்கப்பட்டு வரும் 99 சதவீத பொருள்கள் 5%-க்குள் கொண்டுவரப்படவுள்ளன. அதேபோல் 28%-இன்கீழ் வரி விதிக்கப்படும் 90 சதவீத பொருள்கள் 18% வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன.

ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைகளை வழங்க 7 அமைச்சா்களைக் கொண்ட ஜிஓஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி செயல்பட்டு வருகிறாா்.

இந்தக் குழுவிடம் ஜிஎஸ்டி விகிதத்தை இரண்டாக குறைப்பது, குறிப்பிட்ட சில பொருள்களுக்கு சிறப்பு வரியை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை நிதியமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை பரிசீலித்து ஜிஓஎம் வழங்கும் ஆலோசனைகள் மீது செப்டம்பா் மாதம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சா்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5%, 18% என இரண்டாக குறைப்பதால் நுகா்வு அதிகரிக்கும். அதேபோல் சிறுதொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் எளிமையான வணிகம் புரிய வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

காா்கள் போன்ற விலை உயா்ந்த பொருள்கள் மற்றும் பான் மசாலாவுக்கான இழப்பீட்டு வரி நடைமுறை 2026, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்தப் பொருள்கள் மீது அடுத்தகட்டமாக விதிக்கப்பட வேண்டிய வரி குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்கவுள்ளது.

வாக்குத் திருட்டு விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வாக்குரிமைப் பேரணி! -தேஜஸ்வி

வாக்குத் திருட்டு விவகாரத்தில் முக்கிய நகர்வாக மெகா பேரணி பிகாரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறோம் என்று பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்திரிய ஜனதா தளம்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலை... மேலும் பார்க்க

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் பயணம்!

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் செல்கிறார். இரண்டு நாள் பயணமாக மிஸ்ரி காத்மாண்டு செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டின் வெளியுறவுச் செயலர்களும் இந்தியா - நேபாளம் இடையிலான உறவு க... மேலும் பார்க்க

காஷ்மீரில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கும் பணியில் முழுவீச்சில் ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கும் பணிகளில் முழுவீச்சில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராம... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது: தென் கொரிய வெளியுறவு அமைச்சர்

இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சர் எஸ். சிவசங்கர் உடனான சந்திப்பு குறித்து அவர் பேசியதா... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் காவலர் அதிகாரி தற்கொலை

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை காவல் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் டல்லிராஜ்ஹாரா காவல் நிலையத்தில் உதவி துணை ஆய்வாளராக ... மேலும் பார்க்க