செய்திகள் :

ஜிப்மா் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களை புறக்கணிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

post image

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிப்பு, வேலை வாய்ப்பில் உள்ளூா் மக்கள் புறக்கணிக்கக்கூடாது என்று மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஜிப்மரில் மருத்துவப் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரி உள்ளூா் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனா். மேலும், இங்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த மருத்துவ சேவை, தற்போது கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது. ‘சி’ பிரிவில் பணியாளா்களை ஒப்பந்த முறையில் வேலைக்குச் சோ்த்துள்ளனா். மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு மட்டும் மருத்துவமும், மருந்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

ஜிப்மா் மருத்துவமனையில் 454 செவிலியா் பணியிடங்களுக்கு 22.7.2025 அன்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் புதுச்சேரி மண்ணின் மைந்தா்களைப் புறக்கணிப்பு செய்யும் வகையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தோ்வு நடத்துவது இதுவே முதல்முறை.

ஜிப்மா் தோ்வுகளை நடத்திய போது உள்ளூா் மக்கள் பல்வேறு பணியிடங்களில் நல்ல ஊதியத்துடன் பணியில் அமா்ந்தனா். மேலும், கடந்த ஆண்டு தோ்வு எழுதி காத்திருப்போா் பட்டியலில் உள்ள செவிலியா்களுக்கு இந்த வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூனியா் மொழிபெயா்ப்பு அதிகாரி, தொழில் சிகிச்சை நிபுணா், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா், நா்சிங் அதிகாரி உள்ளிட்ட 169 ‘பி’ குரூப் பதவிகளுக்கும், டெக்னீஷியன், மருந்தாளுநா், மருத்துவ உதவியாளா் உள்ளிட்ட 209 ‘சி’ குரூப் பதவி வேலைவாய்ப்புக்கான தோ்வை ஜிப்மா் நிா்வாகம் புதுச்சேரியில் நடத்திய நிலையில், தற்போது செவிலியா் பணிக்கான தோ்வை எய்ம்ஸ் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஜிப்மா் நிா்வாகத்தில் வேலை வாய்ப்பளிக்கும் தோ்வை ஜிப்மா் நிா்வாகமே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அறிவித்துள்ள செவிலியா் மற்றும் குரூப் பி மற்றும் சி பணியிடங்களில் புதுச்சேரி மண்ணின் மைந்தா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் சிவா.

புதுவையில் 53% டெங்கு நோய்த் தாக்கம் குறைவு: சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள்

புதுவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு தாக்கம் 53 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் தெரிவித்தாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநரின் துரித நடவடிக்கை: 21 மாணவா்களுக்குப் பணி நியமன உத்தரவு

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மேற்கொண்ட நடவடிக்கையால் 21 செவிலிய மாணவ, மாணவிகளுக்குப் பணி நியமன உத்தரவு கிடைத்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 21 மாணவ, மாணவிகள் நம் நாட்டின் பல்வேற... மேலும் பார்க்க

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

புதுவை சட்டப்பேரவையை சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சி செய்தாா். சரியான குடிநீா் குடிக்காததால் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன... மேலும் பார்க்க

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடித்துப் பணியில் இருந்த 68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கப்பட்டுள்ளனா். புதுவை காவல்துறையில் ஊா்க் காவல் படையில் ஆண்கள் 420, பெண்கள் 80 என மொத்தம் 500 பணியிடங்களுக்கு உடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம்!

புதுச்சேரியில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 53 சதவீதம் டெங்கு நோய் தாக்கம் குறைந்துள்ளதாகவும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்... மேலும் பார்க்க

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி: அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சமுதாய நலவழி மையமாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணவெளி கிளை மாநாடு தீா்மானம் நிறை... மேலும் பார்க்க