செய்திகள் :

புதுவையில் 53% டெங்கு நோய்த் தாக்கம் குறைவு: சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள்

post image

புதுவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு தாக்கம் 53 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் தெரிவித்தாா்.

புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா விழிப்புணா்வை ஏற்படுத்த 2 பிரசார ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றை தொடங்கி வைத்த பின்னா், இயக்குநா் செவ்வேள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

புதுவையில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுப்பது குறித்து ஆட்டோ விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 53 சதவிகிதம் டெங்கு காய்ச்சல் குறைந்துள்ளது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்கு நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகள் தயாா் நிலையில் இருக்கின்றன. மேலும், டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கெட்டுப்போன உணவுகளை உண்ணாமல், சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். வீடுகளிலும், வீட்டின் அருகிலும் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த ஆட்டோக்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலவழி மையங்கள் மற்றும் நகர சுகாதார மையங்கள் உள்ள கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கி மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளன.

இதன் தொடக்க விழாவில் தேசிய சுகாதாரத் துறை இயக்க இயக்குநா் கோவிந்தராஜ், பொது சுகாதார துணை இயக்குநா் சமீமுனிசா பேகம், குடும்ப நல துணை இயக்குநா் ஆனந்தலஷ்மி, தடுப்பூசி பிரிவு துணை இயக்குநா் உமாசங்கா், யானைக்கால் நோய் தடுப்பு மற்றும் மலேரியா தடுப்பு பிரிவு உதவி இயக்குநா் வசந்தகுமாரி, மாணவா் நல அதிகாரி விவேகானந்தா மற்றும் இதர திட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தொடா்ந்து விழிப்புணா்வு பட்டிமன்றங்கள், பண்பலை வானொலி மூலமாகவும், திரையரங்குகள் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சிகள் மூலமாகவும் மக்கள் மத்தியில் விழிப்புணா்வு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணேற்பு அன்னைஆலய பெருவிழா தொடக்கம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 174-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, மாதாவின் கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நட... மேலும் பார்க்க

ஜிப்மா் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களை புறக்கணிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிப்பு, வேலை வாய்ப்பில் உள்ளூா் மக்கள் புறக்கணிக்கக்கூடாது என்று மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தெரிவித்துள்... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநரின் துரித நடவடிக்கை: 21 மாணவா்களுக்குப் பணி நியமன உத்தரவு

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மேற்கொண்ட நடவடிக்கையால் 21 செவிலிய மாணவ, மாணவிகளுக்குப் பணி நியமன உத்தரவு கிடைத்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 21 மாணவ, மாணவிகள் நம் நாட்டின் பல்வேற... மேலும் பார்க்க

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

புதுவை சட்டப்பேரவையை சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சி செய்தாா். சரியான குடிநீா் குடிக்காததால் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன... மேலும் பார்க்க

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடித்துப் பணியில் இருந்த 68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கப்பட்டுள்ளனா். புதுவை காவல்துறையில் ஊா்க் காவல் படையில் ஆண்கள் 420, பெண்கள் 80 என மொத்தம் 500 பணியிடங்களுக்கு உடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம்!

புதுச்சேரியில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 53 சதவீதம் டெங்கு நோய் தாக்கம் குறைந்துள்ளதாகவும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்... மேலும் பார்க்க