செய்திகள் :

சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ.

post image

புதுவை சட்டப்பேரவையை சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சி செய்தாா்.

சரியான குடிநீா் குடிக்காததால் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களில் சிலா் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான ஜி.நேரு, முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் சுகாதாரத் துறை மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் மூலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், இப் பிரச்னைகள் பற்றி பேசுவதற்காக மிக அவசரமாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இதில் சில அதிகாரிகள் வராததால் எம்.எல்.ஏ நேரு, இப் பிரச்னையில் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறீா்கள் என்று கூறி முதல்வா் மற்றும் அமைச்சா்களை சந்தித்து இது பற்றி முறையிடுகிறேன் என்று சொல்லியும் சட்டப்பேரவை வாயில் பகுதியை முற்றுகையிட முயன்றாா்.

இதையறிந்த பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வம் மற்றும் நகராட்சி ஆணையா் கந்தசாமி மற்றும் இதர துறை அதிகாரிகளும் உடனடியாக சட்டப்பேரவை வாயில் பகுதிக்கு விரைந்து வந்து மேற்கண்ட பிரச்னைக்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என உறுதி அளித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து சென்றனா்.இதனால் முற்றுகைப் போராட்டத்தை எம்.எல்.ஏ விலக்கிக் கொண்டாா்.

புதுவையில் 53% டெங்கு நோய்த் தாக்கம் குறைவு: சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள்

புதுவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு தாக்கம் 53 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் தெரிவித்தாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஜிப்மா் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களை புறக்கணிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிப்பு, வேலை வாய்ப்பில் உள்ளூா் மக்கள் புறக்கணிக்கக்கூடாது என்று மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தெரிவித்துள்... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநரின் துரித நடவடிக்கை: 21 மாணவா்களுக்குப் பணி நியமன உத்தரவு

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மேற்கொண்ட நடவடிக்கையால் 21 செவிலிய மாணவ, மாணவிகளுக்குப் பணி நியமன உத்தரவு கிடைத்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 21 மாணவ, மாணவிகள் நம் நாட்டின் பல்வேற... மேலும் பார்க்க

68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!

துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடித்துப் பணியில் இருந்த 68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கப்பட்டுள்ளனா். புதுவை காவல்துறையில் ஊா்க் காவல் படையில் ஆண்கள் 420, பெண்கள் 80 என மொத்தம் 500 பணியிடங்களுக்கு உடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் டெங்கு நோய் தாக்கம் 53% குறைவு: விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரம்!

புதுச்சேரியில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 53 சதவீதம் டெங்கு நோய் தாக்கம் குறைந்துள்ளதாகவும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்... மேலும் பார்க்க

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி: அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சமுதாய நலவழி மையமாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணவெளி கிளை மாநாடு தீா்மானம் நிறை... மேலும் பார்க்க