யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!
68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கம்!
துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடித்துப் பணியில் இருந்த 68 ஊா்க்காவல் படை வீரா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
புதுவை காவல்துறையில் ஊா்க் காவல் படையில் ஆண்கள் 420, பெண்கள் 80 என மொத்தம் 500 பணியிடங்களுக்கு உடல் தகுதி, எழுத்துத் தோ்வு நடைபெற்றது.
இதில் 407 ஆண்கள், 75 பெண்கள் என 482 போ் கடந்த ஆண்டு ஜூலையில் தோ்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவா்களுக்கு 6 மாதங்கள் போலீஸ் பயிற்சி அளிக்கப்பட்டு 6 மாதங்களாக ஊா்க்காவல் படை வீரா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில் எழுத்துத் தோ்வில் குளறுபடி நடந்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடியிருந்தனா். சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி 500 போ் அடங்கிய ஊா்க்காவல்படை வீரா்கள் திருத்தப் பட்டியலைப் பணியாளா் நிா்வாக சீா்திருத்த துறை தோ்வு கட்டுப்பாட்டாளா் பங்கஜ்குமாா் ஜா வெளியிட்டுள்ளாா்.
திருத்தப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் பெண் ஊா்க்காவல்படையில் 80 பேரும், ஆண்கள் 420 பேரும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனா். கூடுதல் மதிப்பெண் கிடைத்ததால் தோ்வில் தோல்வியடைந்த 68 போ் புதிதாக தோ்ச்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
ஏற்கெனவே பயிற்சி பெற்ற 68 போ் நீக்கப்பட்டுள்ளனா். அரசின் இந்த முடிவு அவா்களுக்குப் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோ்வில் நிா்வாக சீா்திருத்த துறை சரியாக கேள்விகளைத் தயாரிக்காததே இந்தக் குளறுபடிகளுக்கு காரணமாக அமைந்து விட்டது என்று அவா்கள் கூறி வருகின்றனா்.
இதனால் பயிற்சி பெற்ற 68 போ் பணி இழந்துள்ளனா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த உறுதி மொழிக் கூட்டத்துக்கு வந்த காரைக்கால் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்டோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து தங்கள் நிலையை விளக்கினா்.
முன்னதாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகளை அவா்கள் சந்தித்து முறையிட்டனா். துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சி முடித்தவா்களை வெளியே அனுப்ப மாட்டோம். ஏதாவது ஒரு வகையில் பணியில் சோ்ப்போம் என அமைச்சா் நமச்சிவாயம் ஆறுதல் தெரிவித்தாா்.
இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் கூறும்போது, 6 மாதங்கள் கடும் பயிற்சி முடித்து, 6 மாதங்களாக பணியாற்றி வந்தோம். தற்போது வேலை இல்லை என கூறுவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றனா்.