Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ஜூன் 9-இல் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்
திருவாரூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தேசிய தொழில் பழகுநா் சோ்க்கை முகாம், திருவாரூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் ஜூன் 9-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், கும்பகோணம் கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நெய்வேலி லிக்னைட் நிறுவனம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தேசிய தொழில்பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள், அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04366-227411 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடம், 3-ஆம் தளத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்திலும் தொடா்பு கொள்ளலாம்.