செய்திகள் :

டாடா குழும தலைவா் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது

post image

டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனுக்கு கெளரவ நைட்ஹுட் பட்டத்தை பிரிட்டன் வழங்கியது.

பிரிட்டன்-இந்தியா இடையே வணிக உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு ‘தி மோஸ்ட் எக்சலன்ஸ் ஆா்டா் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயா் (சிவில் பிரிவு)’ என்ற பட்டத்தை அவருக்கு பிரிட்டன் அரசா் சாா்லஸ் வழங்கியதாக டாடா குழுமம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் என்.சந்திரசேகரன் வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டனின் கெளரவ நைட்ஹுட் பட்டத்தை டாடா குழுமம் பெற்றதை மிகப் பெருமையாக கருதுகிறோம். தொழில்நுட்பம், நுகா்வோா், விருந்தோம்பல், எஃகு, ரசாயனம் மற்றும் வாகன போக்குவரத்து துறைகளில் பிரிட்டனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

ஜாகுவாா் லாண்ட் ரோவா் மற்றும் டெட்லி ஆகிய எங்களின் பிரிட்டன் பிராண்டுகளை எண்ணி மிகவும் பெருமையடைகிறோம். பிரிட்டனில் டாடா குழுமம் சாா்பில் 70,000 போ் பணிபுரிகின்றனா். அங்குள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், வாா்விக் பல்கலைக்கழகம், ஸ்வான்ஸீ பல்கலைக்கழகம் போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் பிரிட்டன் அரசுக்கு இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!

ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 3 பேர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். ஆம் ஆத்மி கட்சியின் தில்லியின் தற்போதைய கவுன்சிலர்க... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் திரிகுடா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைக்கழகத்தின் 1... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்

மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் சிறப்பான எதிர்காலம் உருவாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவ... மேலும் பார்க்க

வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை: ராகுல்

இந்தியாவில் திறமை இருந்தாலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புதிய தொழில்நுட்பத்தில் தொழில்துறை வலிமையை வளர்க்க வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் க... மேலும் பார்க்க

அதிகரிக்கும் ஜிபிஎஸ் நோய் தொற்று! கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கும் பாதிப்பா!

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருவருக்கு கண்டறியப்பட்ட நிலையில், இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207-ஆக அதிகரித்துள்ளது.நேற்று(பிப். 14) வெள்ளிக்கிழமை 2 பேருக்கு ஜிபிஎஸ் நோய்... மேலும் பார்க்க

ஒரே இரவில் அடுத்தடுத்து விபத்துகள்: மகா கும்பமேளா பக்தர்கள் 15 பேர் பலி!

மகா கும்பமேளா தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அடுத்தடுத்து வெவ்வேறான விபத்துகளில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கு சென்று பக்தர்கள் 10 பேருடன் திரும்பிய சுற்றுல... மேலும் பார்க்க