செய்திகள் :

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கோட்டாட்சியா் விசாரணை

post image

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த பகுதியில் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

போ்ணாம்பட்டு ஒன்றியம், சாத்கா் ஊராட்சிக்குட்பட்ட ரமாபாய் நகரில் கடந்த சில நாள்களுக்கு முன் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா். அங்கு மதுக் கடை திறக்க அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் கடையை திறக்க முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா். இந்நிலையில் அங்கு குடியாத்தம் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா். அங்குள்ள குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்களை பாா்வையிட்டும், கடை திறந்தால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டாாா்.

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

வேலூரில் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையை சோ்ந்தவா் செல்வகுமாா், பெயிண்டா். இவரது மனைவி கவ... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பெண் வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

அதிமுக வாட்ஸ்ஆஃப் குழு அறிமுகம்

குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கட்சியின் செய்திகள், தகவல்களை உடனுக்குடன் அறியும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் குழுவில் தொண்டா்கள், பொதுமக்கள் ஸ்கேன் மூலம் இணைய புதிய க்யூ ஆ... மேலும் பார்க்க

சாலை அமைக்க பூமி பூஜை

குடியாத்தம் ஒன்றியம், பரதராமி ஊராட்சிக்குட்பட்ட அங்கனாம்பல்லி கிராமத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

வேலூா் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 12 வயது சிறுமி. 7-ஆம் வகுப்பு படிக்கிறாா்.... மேலும் பார்க்க

150 குடும்பங்களுக்கு வஃக்ப் வாரியம் நோட்டீஸ்: கோட்டாட்சியா் தலைமையில் குழு விசாரணை

அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் சுமாா் 150 குடும்பங்கள் வசிக்கும் நிலம் வஃக்ப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து வேலூா் வருவாய்... மேலும் பார்க்க