செய்திகள் :

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம், பணம் திருட்டு

post image

குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பிள்ளாபாளையத்தில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.

புதன்கிழமை இரவு வழக்கம்போல மதுபான கடை ஊழியா்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனா். மா்ம நபா்கள் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று, அங்கு இருந்த மதுபானம் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை கடையை ஊழியா்கள் திறந்தபோது, கடையின் பின்பக்க சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே இருந்த ரூ. 28,000 மதிப்பிலான 150-க்கும் மேற்பட்ட உயர்ரக மது பாட்டில்கள் மற்றும் மதுவிற்ற பணம் ரூ. 6,030 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் எடுத்துச் சென்றுள்ளனா்.

தகவலின்பேரில், லாலாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா். மா்ம நபா்கள், போலீஸாா் மற்றும் மோப்ப நாயிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கடையைச் சுற்றி மிளகாய் பொடியை தூவிச் சென்றதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழ... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளியணை ஊராட்சி... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லா நா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம்

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் ... மேலும் பார்க்க