செய்திகள் :

டிரம்ப்பிடம் மன்னிப்புக் கேட்டார் ஸெலென்ஸ்கி : அமெரிக்கா

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கேட்டதாக டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார்.

ரஷிய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.

அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டார். இந்த விவகாரம் உலகளவில் பெரிதும் பேசப்பட்டது. வாக்குவாதம் குறித்து டிரம்ப்பிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என ஸெலென்ஸ்கி முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வாக்குவாதம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப்புக்கு ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளதாக அமெரிக்க சிறப்பு தூதர் (மத்திய கிழக்கு) ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | ரஷியாவில் 337 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

“இதனை முக்கியமான முன்னெடுப்பாகக் கருதுகிறோம். இது தொடர்பாக எங்களின் குழுக்களுக்கும் உக்ரேனியர்கள், ஐரோப்பியர்களுக்கும் இடையே நிறைய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று விட்காஃப் தெரிவித்தார்.

ரஷியாவுடனான மூன்று ஆண்டுக்கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் சிறப்புத் தூதருடன் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. உக்ரைன் அதிபரின் மன்னிப்புக் கடிதம் இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றமாக இருக்கும் என விட்காஃப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கடந்த வாரம் பேசிய உரையில் ஸெலென்ஸ்கியிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாகக் குறிப்பிட்டார். உக்ரைனுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவிகளைத் தான் நிறுத்துவதாக அறிவித்த பின்னர் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தை தான் வரவேற்பதாகவும், இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும் என்றும் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

ஸெலென்ஸ்கி நேற்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்தார். ”உலக விவகாரங்களில் அவரது பரந்துவிரிந்த பார்வை, உக்ரைனுக்கான ஆதரவு ஆகியவற்றிக்கும் நான் நன்றியுள்ளவனாகிறேன். உக்ரைன் எதிர்காலத்திற்கான நம்பிக்கையான வார்த்தைகளைக் கேட்பது மிக முக்கியமானது” என்று தனது எக்ஸ் தளத்தில் அந்தச் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவருடன் அவரது மனைவி உஷ... மேலும் பார்க்க

ரயில் சிறைபிடிப்பு விவகாரம்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! 104 பயணிகள் மீட்பு!

ரயில் சிறைபிடிப்பு விவகாரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரயிலில் இருந்த 104 பயணிகள் பத்திரமாக பாதுகாப்பு பணியாளர்களால் மீட்கப்பட்டனர். பாகிஸ்தானில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 9 பெட... மேலும் பார்க்க

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

வாஷிங்டன் / டொரன்டோ: தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டோரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமி... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபா் டுடோ்த்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 போ் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினா் கூறியதாவது: தலைநகா் ஜோஹன்னஸ்பா்கின் சா்வதேச விமான நிலையம் அருகே நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவாா்த்தை: ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோ / ஜெட்டா: உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னா் ரஷியா மீது உக்ரைன் இதுவர... மேலும் பார்க்க