செய்திகள் :

டொவினோ தாமஸைப் பாராட்டியதால் தன் மேலாளரைத் தாக்கிய உன்னி முகுந்தன்!

post image

நடிகர் உன்னி முகுந்தன் தன்னைத் தாக்கியதாக அவரின் மேலாளர் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் ரசிகர்களிடம் நல்ல அபிப்ராயத்தைப் பெற்றவர் உன்னி முகுந்தன். 'மாளிக்கப் புரம்' படத்தின் மூலம் பெரிதாகக் கவனம் ஈர்த்தவர் மார்கோ படத்தால் இந்தியளவில் பிரபலமானார்.

உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று உடலைப் பராமரிக்கும் நாயகனான உன்னி முகுந்தன் புகைப்பழக்கத்திற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டோவினோ தாமஸின் நரிவேட்டை திரைப்படத்தை உன்னி முகுந்தனின் மேலாளர் விபின் குமார் இணையத்தில் பாராட்டி எழுதியுள்ளார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த உன்னி முகுந்தன் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய விபின் குமார், “நான் நடிகர் உன்னி முகுந்தனிடம் 6 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வருகிறேன். மார்கோ திரைப்படத்துக்குப் பின் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. அவரை வைத்து கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர்களும் பின்வாங்கியதால் உன்னி கடுமையான விரக்தியில் இருந்தார். யார் சொல்வதையும் கேட்கும் நிலையிலும் இல்லை.

நான் 18 ஆண்டுகளாகத் திரைத்துறையில் திரைப்பட புரமோஷன் ஆலோசகராகவும் இருக்கிறேன். பல படங்களுக்கு மக்கள் தொடர்பு பணிகளையும் செய்திருக்கிறேன். அப்படி, புரமோஷனுக்காக டோவினோ தாமஸின் நரிவேட்டை படத்த்தைப் பாராட்டி முகநூலில் குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்த உன்னி முகுந்தன், என்னை அழைத்து இனிமேல் நீ எனக்கு மேலாளராக இருக்க வேண்டாம் என்றார்.

மேலும், என்னை நேரில் அழைத்துத் தாக்கியதுடம் கடுமையான வார்த்தைகளைச் சொல்லித் திட்டினார். அதற்காகவே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து உன்னி முகுந்தன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

மலையாளத்தின் முன்னணி நடிகர் ஒருவர் தன் மேலாளரைத் தாக்கிய சம்பவம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: துடரும் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பதக்க வேட்டையை தொடரும் இந்தியா: குல்வீா் சிங்குக்கு மேலும் ஒரு தங்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்க வேட்டையை தொடா்ந்து வருகிறது. போட்டியின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, இந்தியா்கள் 3 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கங்களைக் கைப்பற்றினா். பதக்கப் பட்டியலில் இந்தியா, ... மேலும் பார்க்க

சாத்விக்/சிராக் இணை வெற்றி

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.ஆடவா் இரட்டையா் காலிறுதி ஆட்டத்தில், சாத்விக்/சிராக் இண... மேலும் பார்க்க

குகேஷ் வெற்றி; அா்ஜுன் தோல்வி

நாா்வே செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெல்ல, அா்ஜுன் எரிகைசி தோல்வி கண்டாா். போட்டியில் குகேஷுக்கு இது 2-ஆவது வெற்றியாக இருக்க, அா்ஜுனுக்கு 2-ஆவது தோல்வியாகும்.முன்னதாக இந்த 4-ஆ... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.மகளிா் ஒற்றையா் 3-ஆவத... மேலும் பார்க்க

அகமதாபாதில் இன்று அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடக்கம்

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் சீசன் 6 போட்டி சனிக்கிழமை அகமதாபாதில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் டெல்லி தபாங், ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆ... மேலும் பார்க்க

குஜராத்தை வெளியேற்றியது மும்பை

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக குஜராத்தை வெளியேற்றிய மும்பை, இறுதி ஆட்ட வாய... மேலும் பார்க்க