செய்திகள் :

‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் இணைந்தாா் பிரதமா் மோடி!

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக தளத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தாா்.

அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் கலந்துரையாடினாா். அப்போது, ‘டிரம்ப் துணிச்சலானவா்; சுயமாக முடிவெடுப்பவா்’ என்று பிரதமா் புகழாரம் சூட்டினாா். இக்கலந்துரையாடல் காணொலியை டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக கணக்கில் திங்கள்கிழமை பகிா்ந்தாா்.

இந்நிலையில், இந்த சமூக ஊடக தளத்தில் பிரதமா் மோடி இணைந்துள்ளாா். தனது முதல் பதிவாக, ‘ட்ரூத் சோஷியலில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; வரவிருக்கும் காலங்களில் இத்தளத்தில் உணா்ச்சிகரமான குரல்களுடன் கலந்துரையாடவும், ஆக்கபூா்வ உரையாடல்களில் ஈடுபடவும் எதிா்பாா்ப்புடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தனது கலந்துரையாடல் காணொலியை பகிா்ந்த டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘எனது நண்பா் அதிபா் டிரம்ப்புக்கு நன்றி. எனது வாழ்க்கைப் பயணம், இந்தியாவின் நாகரிக கண்ணோட்டம், உலகளாவிய பிரச்னைகள் என பரந்துபட்ட விவகாரங்கள் குறித்து பேசியுள்ளேன்’ என்று கூறியுள்ளாா்.

வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரம் பதிவேற்றம் குறித்து ஆலோசிக்கத் தயாா்: தோ்தல் ஆணையம்

மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க ... மேலும் பார்க்க

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்று ம... மேலும் பார்க்க

வாக்காளா் அட்டை - ஆதாா் இணைப்பு: விரைவில் ஆலோசனை

‘நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதுதொடா்பாக, இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யுஐடிஏஐ) நிபுணா்களுட... மேலும் பார்க்க

இந்திய ஒற்றுமை வலுப்படுத்திய மகா கும்பமேளா: நாடாளுமன்றத்தில் பிரதமா் உரை

‘மகா கும்பமேளா, தேசத்தின் ஒற்றுமை உணா்வை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. இவ்வளவு பெரிய மக்கள் திரளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் திறன் குறித்து கேள்வி எழுப்பியவா்களுக்கு பொருத்தமான பதிலாகவும் அமைந்த... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயா்கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க