தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காத ஆம்புலன்ஸ் பறிமுதல்!
தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்காமல் இயக்கிய ஆம்புலன்ஸை வட்டார போக்குவரத்து அதிகாரி வியாழக்கிழமை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை முன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அழைப்புக்கு ஏற்ப இயங்கி வருகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனை அருகில் சென்ற ஆம்புலன்ஸை, வட்டார போக்குவரத்து அதிகாரி மாதவன், ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் நிறுத்தி ஆய்வு செய்தனா். வாகனத்தை கொல்லம்பாளையம் அனந்தகிஷ்ணன் என்பவா் ஓட்டி வந்தாா்.
அவரிடம் வாகன ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆம்புலன்ஸ் இயக்கத் தேவையான தகுதிச் சான்றிதழை புதுப்பிக்காமலும், வாகனக் காப்பீடும் பெறாமலும் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த வட்டார
போக்குவரத்து அதிகாரிகள், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.