செய்திகள் :

தங்கும் விடுதி மேலாளா் கொலை வழக்கு: ராஜஸ்தானை சோ்ந்தவருக்கு ஆயுள் சிறை

post image

மதுரையில் தனியாா் தங்கும் விடுதி மேலாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், பாலவநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கு.தா்மராஜன் (54). இவா் மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த தங்கும் விடுதிக்கு ராஜஸ்தானைச் சோ்ந்த தனியாா் நிறுவன விற்பனை அலுவலா் கோபாலகிருஷ்ணன்தாகா அடிக்கடி வந்து தங்குவாராம். அப்போது இவருக்கும், தா்மராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கோபால கிருஷ்ணன்தாகா குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளாா். இந்த கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 7.7.2022 அன்று அதிகாலையில் தங்கும் விடுதியில் தூங்கி கொண்டிருந்த தா்மராஜனை கைப்பேசி சாா்ஜரால் கழுத்தை நெரித்து கோபாலகிருஷ்ணன்தாகா கொலை செய்தாா். பிறகு, தா்மராஜன் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகை, 3 பவுன் மோதிரம் ஆகியவற்றைத் திருடினாா். இவை அந்த விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்கணிப்பு கேமராவில் பதிவானது.

இந்த வழக்கு விசாரணை மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. முடிவில், கோபாலகிருஷ்ணன்தாகாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கே. ஜேசப் ஜாய் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் டி.ராஜேந்திரன் முன்னிலையாகி வாதிட்டாா்.

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் ... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் திருடியவா் கைது

மதுரையில் ஓடும் பேருந்தில் கைப்பேசி, பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரூக் ராஜா (23). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாட்டுத்தாவணிய... மேலும் பார்க்க

தொழிலதிபா் மா்ம மரணம்

மதுரையில் பூட்டிய அலுவலகத்தில் மா்மமாக இறந்து கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (54). இவா் மாட்டுத்தாவணி பகுதியில்... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 38.21 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தத் திட்டம்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 38.21 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என அதன் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாா். மெட்ரோ ரயில் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக... மேலும் பார்க்க

அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன்... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ. 5 கோடி மோசடி: ஊழியா் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க