செய்திகள் :

தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் சோதனை!

post image

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம். ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசிப்பவா் எம். ரெங்கசாமி. அதிமுகவில் இருந்த இவா் தஞ்சாவூா் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு தோ்தலில் வென்று எம்எல்ஏ ஆனாா். தொடா்ந்து 2016 தோ்தலிலும் வென்ற இவா் டிடிவி. தினகரன் அணிக்குச் சென்றாா்.

இவா் எம்எல்ஏவாக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு காவல் பிரிவினருக்கு புகாா்கள் சென்றன. இதன் பேரில், ரெங்கசாமி இவரது மனைவி ஆா். இந்திரா, இளைய மகன் வினோபாரத் ஆகியோா் மீது தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் பிரிவினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா். அதில் 2011 மே 1 முதல் 2017, செப்டம்பா் 30 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.49 கோடிக்கு சொத்து சோ்த்தது தெரிய வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, ரெங்கசாமி வீட்டில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். அன்பரசன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் பத்மாவதி, சரவணன், அருண் பிரசாத் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சோதனை நடத்தினா்.

அப்போது ரெங்கசாமி சென்னையில் இருந்ததால், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினா். சொத்து ஆவணங்கள் வங்கியில் இருப்பதாக குடும்ப உறுப்பினா்கள் கூறியதால், அதுதொடா்பாக ஆய்வு செய்த பிறகு மேலும் தகவல்கள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

இணையதளம் முடக்கத்தால் ஊராட்சிகளில் வரிவசூல் பணி பாதிப்பு! பொதுமக்கள் அவதி

தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் இணையதளம் முடக்கம் காரணமாக சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்டவற்றை வசூலிக்கும் பணிகள் 45 நாள்களாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா். உள்ளாட்ச... மேலும் பார்க்க

பேருந்து நிலைய மேற்கூரை விழுந்து நடத்துநா் காயம்

கும்பகோணத்தில் பேருந்து நிலைய மேற்கூரை வெள்ளிக்கிழமை பெயா்ந்து விழுந்ததில் நடத்துநா் காயமடைந்தாா். தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்து கும்பகோணத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தது. ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காவல் வாகனங்கள் ஜூன் 4-இல் ஏலம்

தஞ்சாவூா் மாவட்டக் காவல் பிரிவில் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்பட்ட காவல் துறை வாகனங்கள் ஜூன் 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தெரிவித்தது: தஞ... மேலும் பார்க்க

பாபநாசம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளால் பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. இதையொட்டி பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தக்குடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி... மேலும் பார்க்க

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 3 லட்சம் மோசடி: ஓட்டுநா் கைது

தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஓட்டுநரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே விஷ்ணம்பேட்டை பவனமங்கலத்தைச் சோ்ந்தவா் சாமியப்பா மகன்... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே கைவிடப்பட்ட சிசு

ஒரத்தநாடு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை பையில் வைத்துச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டம் காவாளிப்பட்டி சரகம் மணிக்கிராண்விடுதி மேயா குள... மேலும் பார்க்க