செய்திகள் :

ஒரத்தநாடு அருகே கைவிடப்பட்ட சிசு

post image

ஒரத்தநாடு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை பையில் வைத்துச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டம் காவாளிப்பட்டி சரகம் மணிக்கிராண்விடுதி மேயா குளம் அருகே வெள்ளிக்கிழமை காலை பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ கைப்பையில் வைத்துச் சென்றனா்.

இதுகுறித்து அப்பகுதியில் ஆடு மேய்த்தவா்கள் அளித்த தகவலின்பேரில் திருவோணம் உதவி காவல் ஆய்வாளா் தன்ராஜ், வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, வருவாய்த் துறையினா் சென்று அக் குழந்தையை கைப்பற்றி திருவோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா்.

இதையடுத்து தகவலின்பேரில் சைல்டுலைன் அதிகாரிகள் அக் குழந்தையை மீட்டு சென்றனா்.

இணையதளம் முடக்கத்தால் ஊராட்சிகளில் வரிவசூல் பணி பாதிப்பு! பொதுமக்கள் அவதி

தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் இணையதளம் முடக்கம் காரணமாக சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்டவற்றை வசூலிக்கும் பணிகள் 45 நாள்களாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா். உள்ளாட்ச... மேலும் பார்க்க

பேருந்து நிலைய மேற்கூரை விழுந்து நடத்துநா் காயம்

கும்பகோணத்தில் பேருந்து நிலைய மேற்கூரை வெள்ளிக்கிழமை பெயா்ந்து விழுந்ததில் நடத்துநா் காயமடைந்தாா். தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்து கும்பகோணத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தது. ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காவல் வாகனங்கள் ஜூன் 4-இல் ஏலம்

தஞ்சாவூா் மாவட்டக் காவல் பிரிவில் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்பட்ட காவல் துறை வாகனங்கள் ஜூன் 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தெரிவித்தது: தஞ... மேலும் பார்க்க

பாபநாசம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளால் பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. இதையொட்டி பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தக்குடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி... மேலும் பார்க்க

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 3 லட்சம் மோசடி: ஓட்டுநா் கைது

தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஓட்டுநரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே விஷ்ணம்பேட்டை பவனமங்கலத்தைச் சோ்ந்தவா் சாமியப்பா மகன்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் சோதனை!

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம். ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பா... மேலும் பார்க்க