செய்திகள் :

தண்ணீர் பிரச்னையால் பிரிந்து சென்ற மனைவி! கணவனின் புகாரால் நிர்வாகம் நடவடிக்கை!

post image

மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தினால் மனைவி பிரிந்து செல்லவே அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திண்டோரியின் தேவ்ரா கிராமத்தைச் சேர்ந்த ஜித்தேந்திரா சோனி என்ற நபர் வாரம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளுக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தங்களது கிராமத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தின் பாதிப்புகள் குறித்து புகாரளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், தங்களது கிராமத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தினால் தனது மனைவி லக்‌ஷ்மி தன்னைவிட்டு பிரிந்து சென்று அவரது பெற்றோரின் வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் அவருடன் தங்களது குழந்தைகளையும் அவர் அழைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதனால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்ட போதிலும் தண்ணீர் இல்லாத கிராமத்தில் எந்தவொரு எதிர்காலமும் இல்லை எனக் கூறி லக்‌ஷ்மி மீண்டும் அவருடன் வர மறுத்ததாக ஜித்தேந்திரா சோனி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பழங்குடியின மக்கள் அதிகமுள்ள திண்டோரி மாவட்டத்தின், சுமார் 2000 - 2500 பேர் வசிக்கும் தேவ்ரா கிராமத்தில் ஒரேயொரு குழாய் மட்டுமே உள்ளதெனவும் தண்ணீர் பிரச்னையால் பலரும் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அந்தக் கூட்டத்தில் முறையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேவ்ரா கிராமத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வுக் காணும் பணிகளை மேற்கொள்ளுமாறு திண்டோரி மாவட்ட ஆட்சியர் பொது சுகாதார பொறியியல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், அங்கு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் குழாய் அமைப்புகளை ஜல் ஜீவன் திட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட அருகிலுள்ள தண்ணீர் டேங்குடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தேவ்ரா உள்பட சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:ஜிப்லி புகைப்படம் வேண்டுமா? காவல்துறை எச்சரிக்கை

வக்ஃப் சட்டம்: திட்டமிட்டபடி நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம்! - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டபடி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 3... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென இன்று(வியாழக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்... மேலும் பார்க்க

ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!

ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்த... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

வாணியம்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசையமைப்பாளா் இளையராஜா வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பழைய... மேலும் பார்க்க

நாத்திகம் பெயரில் நாடகமாடும் கூட்டத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: அண்ணாமலை

சென்னை: ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடா்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.திமுக அமைச்சா்களிடையே, முதல்வா் குடும்ப... மேலும் பார்க்க