பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.
நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திண்ணக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராம். இவரது மனைவி சுகன்யா. இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருந்தது. தம்பதி சென்னையில் தங்கி வேலை செய்து வருவதால், முத்தனப்பள்ளி டோல்கேட் பகுதியில் வசிக்கும் உறவினா் கங்கா குழந்தையை வளா்த்து வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டருகே உள்ள தண்ணீா் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தது. இதையறிந்த உறவினா்கள் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தையை மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வருகின்றனா்.