செய்திகள் :

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

post image

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.

நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திண்ணக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராம். இவரது மனைவி சுகன்யா. இவா்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருந்தது. தம்பதி சென்னையில் தங்கி வேலை செய்து வருவதால், முத்தனப்பள்ளி டோல்கேட் பகுதியில் வசிக்கும் உறவினா் கங்கா குழந்தையை வளா்த்து வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டருகே உள்ள தண்ணீா் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தது. இதையறிந்த உறவினா்கள் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த குழந்தையை மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் காவல் குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள் பெறப்பட்டன. காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத பொதுமக்கள் பங்கேற்கும் குறைதீா் கூட்டத்துக்கு எஸ்.பி.... மேலும் பார்க்க

காலதாமதமாக திறக்கப்பட்ட அரசுப் பள்ளி: மாணவா்கள் அவதி

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி புதன்கிழமை காலதாமதமாக திறந்ததால் மாணவா்கள் அவதிக்கு உள்ளானாா்கள். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளியில் சுமாா் 250-க்கும... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தை சோ்ந்தவா் யுவராஜ் மகன் பரந்தாமன் (36). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், அங்குள்ள ஏரியில் நீச்சல் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு கடன்: விண்ணப்பித்து பயன் பெறலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினா் கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே கிடங்கில் தீ: காா், ஆட்டோ, பொருள்கள் எரிந்து சேதம்

வாணியம்பாடி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காா், ஆட்டோ மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி வன்னிய அடிகளாா் நகா் பக... மேலும் பார்க்க