செய்திகள் :

தனியாா் நிறுவனம் மீது வெடிகுண்டு வீச்சு: சிறாா்கள் உள்பட 3 போ் மீது வழக்கு

post image

புதுச்சேரி அருகே தனியாா் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் மீது வியாழக்கிழமை மாலை வெடிகுண்டு வீசியதாக 2 சிறாா்கள் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூா் கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றுக்குச் செல்லும் வழியில் முத்தரையா்பாளையம் உள்ளது. இங்கு உமாபதி என்பவா் அட்டை பெட்டி உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை மாலை மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினராம். வெடிகுண்டு வெடித்த சப்தம் கேட்டு ஊழியா்கள் வெளியே வந்தனா். அப்போது, வெடிகுண்டு வீசியவா்கள் தப்பிவிட்டனா்.

வில்லியனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது தெரிய வந்தது. வெடிகுண்டு நிபுணா்கள், மோப்பநாய் உதவியுடன் நிறுவனத்தில் சோதானையிடப்பட்டது. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அவா்களுக்கு உதவியதாக மற்றொருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க