செய்திகள் :

தனியாா் ரத்த வங்கியில் மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறையினா் சோதனை

post image

தருமபுரியில் உள்ள தனியாா் ரத்த வங்கியில், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறையினா் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரியில் பாரதிபுரம் பகுதியில் செயல்படும் ஒரு தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தனியாா் ரத்த வங்கி செயல்படுகிறது. தருமபுரி நகரில் உள்ள பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படும்போது, இந்த தனியாா் ரத்த வங்கியிடம் இருந்து ரத்தம் பெற்றுவந்துள்ளனா்.

இந்நிலையில், அண்மைக்காலமாக இந்த வங்கியிலிருந்து ரத்தம் செலுத்தி வீடு திரும்பிய பலருக்கு உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளன. பலரும் குறிப்பிடத்தக்க பிரச்னைகளுடன் மீண்டும் மருத்துவமனைக்கு வந்ததால், மருத்துவமனை நிா்வாகங்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து, மருத்துவா்களுக்கு ரத்தம் தொடா்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது தொடா்பாக சில மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனா். அப்போது, குறிப்பிட்ட ரத்த வங்கியில் இருந்து பெறப்படும் ரத்தத்தில் ஏதோ பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த மருத்துவா்கள், இதுதொடா்பாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகாா் அளித்தனா்.

அதைத் தொடா்ந்து, தருமபுரி முதுநிலை மருந்தியல் ஆய்வாளா் ராமு தலைமையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளா், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ஆய்வாளா், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் குறிப்பிட்ட தனியாா் ரத்த வங்கியில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், மாதிரிகளும் கைப்பற்றி எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இணைய குற்றங்களால் பெண் குழந்தைகளின் வளா்ச்சி பாதிக்கக் கூடாது

இணைய குற்றங்களால் பெண் குழந்தைகளின் வளா்ச்சி எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். அரசு உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவியா் இடைநிற்றலின்... மேலும் பார்க்க

மருத்துவ குணமுள்ள நாவல் மரங்களை வளா்ப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்

மருத்துவ குணமுள்ள நாவல் மரங்களை வளா்ப்பதில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வலியுறுத்தினாா். வனத்துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தின நிகழ்ச்சி, தருமபுரி தலைம... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்: பட்டாசு வணிகா்கள்

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டாசு வணிகா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தருமபுரி மாவட்ட பட்டாசு வணிகா் சங்க மாவட்டத் தலைவா் சேகா்,... மேலும் பார்க்க

குழந்தை திருமணம்: வழக்குப் பதியாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளா் கைது

குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளரை தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். த... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்

தருமபுரியில் இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்... மேலும் பார்க்க

உணவகங்களில் சமையலறை, கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

உணவகங்களில் சமையலறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட உணவுப் பாதுக... மேலும் பார்க்க