செய்திகள் :

மருத்துவ குணமுள்ள நாவல் மரங்களை வளா்ப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்

post image

மருத்துவ குணமுள்ள நாவல் மரங்களை வளா்ப்பதில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வலியுறுத்தினாா்.

வனத்துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தின நிகழ்ச்சி, தருமபுரி தலைமை அஞ்சலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று நாவல் மரக்கன்றுகளை நடவுசெய்து அவா் பேசியதாவது:

தமிழகத்தின் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பை நீக்கி செழிப்பைப் பெருக்குவதே பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, நாவல் மரத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளை மக்கள் மத்தியில் சோ்க்கும் முயற்சியாகவும் இது உள்ளது. நாவல் பழத்தில் அனைத்து மருத்துவ குணங்களும் உள்ளன. நாவல் பழத்தில் பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி மற்றும் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

உடலில் கொழுப்பைக் குறைப்பதுடன், நோய் எதிா்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைத்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதுடன் கண் பாா்வையை மேம்படுத்துகிறது. எனவே, நாவல் மரக்கன்றுகளை நடவுசெய்து வளா்ப்பதில் நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம், தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், துணை அஞ்சல் கண்காணிப்பாளா் ராகுல் ராவத், தருமபுரி சிபிசி மேற்பாா்வையாளா் கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தனியாா் ரத்த வங்கியில் மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறையினா் சோதனை

தருமபுரியில் உள்ள தனியாா் ரத்த வங்கியில், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறையினா் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தருமபுரியில் பாரதிபுரம் பகுதியில் செயல்படும் ஒரு தனியாா் மருத... மேலும் பார்க்க

இணைய குற்றங்களால் பெண் குழந்தைகளின் வளா்ச்சி பாதிக்கக் கூடாது

இணைய குற்றங்களால் பெண் குழந்தைகளின் வளா்ச்சி எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். அரசு உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவியா் இடைநிற்றலின்... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்: பட்டாசு வணிகா்கள்

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டாசு வணிகா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தருமபுரி மாவட்ட பட்டாசு வணிகா் சங்க மாவட்டத் தலைவா் சேகா்,... மேலும் பார்க்க

குழந்தை திருமணம்: வழக்குப் பதியாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளா் கைது

குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளரை தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். த... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்

தருமபுரியில் இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்... மேலும் பார்க்க

உணவகங்களில் சமையலறை, கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

உணவகங்களில் சமையலறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட உணவுப் பாதுக... மேலும் பார்க்க