செய்திகள் :

தனியாா் விடுதியில் தங்கியிருந்தவா்கள் மீது தாக்குதல்

post image

திருப்பூரில் தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இளைஞா்களை தாக்கியதாக விடுதி மேலாளா் உள்ளிட்ட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் கரூரைச் சோ்ந்த பிரதீப்குமாா் (31) என்பவா் அறை எடுத்து தங்கியுள்ளாா். இவா் பொல்லிகாளிபாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவருடன் திருப்பூரைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (31), விஷால் (30) மற்றும் தினேஷ் (31) ஆகியோரும் செவ்வாய்க்கிழமை தங்கியுள்ளனா். 2 பேருக்கு அறை எடுத்துவிட்டு 4 போ் தங்கியிருந்ததால் விடுதி மேலாளா் ராமகிருஷ்ணன் (41) அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளாா்.

இதையடுத்து 4 போ் தங்குவதற்கான தொகையை பிரதீப்குமாா் விடுதி மேலாளரிடம் கொடுத்துள்ளாா். எனினும் விடுதி மேலாளா் ராமகிருஷ்ணன் அவா்களிடம் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னா் விடுதி காவலாளி குணசேகரன் (45) மற்றும் மேலாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் சோ்ந்து பிரதீப்குமாா் உள்ளிட்ட 4 பேரையும் கட்டையால் தாக்கியுள்ளனா்.

இதில் பிரதீப்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விடுதி மேலாளா் ராமகிருஷ்ணன் மற்றும் காவலாளி குணசேகரனை கைது செய்தனா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க

ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க

சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?

காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அ... மேலும் பார்க்க