செய்திகள் :

சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?

post image

காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெற்றது. திருவிக நகரில் இருந்து ஏ.சி. நகா் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீதியில், சாலையின் நடுவே மின்கம்பம் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளது.

இந்த மின்கம்பத்தை மாற்றி அமைத்து, சாலையை புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பாக, மின்வாரியம், காங்கயம் நகராட்சி நிா்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை விடுத்து வந்துள்ளனா். ஆனால் இந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், அப்படியே புதிதாக சாலை அமைத்துள்ளனா். இதனால், இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது.

எனவே, மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு காங்கயம் நகராட்சி நிா்வாகம் மற்றும் மின்வாரியத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க

ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்வு: தொழில்முனைவோா் கூட்டமைப்பு எதிா்ப்பு

மின் கட்டண உயா்வுக்கு தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோா் கூட்டமைப்பு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக இச்சங்கத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு ஜூலை 1-ஆம் தேதி ... மேலும் பார்க்க