செய்திகள் :

தன்னம்பிக்கை மட்டும் போதும்: டி20யில் மீண்டும் களமிறங்கும் முகமது ஷமி!

post image

இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி காயத்திலிருந்து குணமாகி மீண்டு வருவேன் என தான் நம்பவில்லை எனக் கூறியுள்ளார்.

கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2023இல் விளையாடிய முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறினார்.

பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

பிஜிடி தொடரில் பங்கேற்பாரென பலரும் எதிர்பார்த்த நிலையில் பிசிசிஐ அவரை தேர்வு செய்யவில்லை. அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பங்கேற்பாரென பிசிசிஐ அறிவித்துள்ளது.

2014இல் இருந்து 23 டி20 போட்டிகளில் மட்டுமே ஷமி விளையாடியுள்ளார். 34 வயதாகும் முகமது ஷமி இன்று இரவு தொடங்கும் இங்கிலாந்துடனான டி20 தொடரில் கம்பேக் தரவிருக்கிறார்.

இந்த நிலையில் முகமது ஷமி கூறியதாவது:

காயத்தால் பயந்தேன்

நான் ஒரு ஆண்டு முழுவதும் காந்திருந்தேன். மீண்டும் உடல் நலத்தைப் பெற கடினமாக உழைத்தேன். குணமாகிவரும்போது மீண்டும் காயமடைந்ததால் மிகவும் பயந்தேன்.

முழு வீச்சில் இருக்கும் ஒருவர் காயம்பட்டு என்சிஏக்கு (தேசிய கிரிக்கெட் அகாதமி) சென்று மீண்டு வருவது மிகவும் கடினமானது.

காயம் ஏற்படும்போது, ஒரு விளையாட்டு வீரனாக நீங்கள் பலமடைகிறோம் என நினைக்கிறேன். மனதளவில் வலுவாக இருக்கும்போது மீண்டும் மீண்டும் ஒரு சில விஷயங்களை செய்வோம்.

தன்னம்பிக்கை மட்டும் போதும்

என்ன முடிந்ததோ அது முடிந்தது. நான் காயத்திலிருந்து குணமடைந்து வந்துவிட்டேன். கடினமாக உழைத்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும். நான் அதைத்தான் நம்புகிறேன். காயமானாலும் நாட்டுக்காக உங்களது அணிக்காக மீண்டு வரவேண்டும். அதனால் சண்டையிடுங்கள், முன்னேறுங்கள்.

உங்கள் திறமை மீது தன்னம்பிக்கை இருந்து, நீங்களும் பலமாக இருந்தால் போதுமானது. வேறெதுவும் தேவையில்லை. எதை செய்வதற்கும் தன்னம்பிக்கை போதுமானது.

ரிதம் முக்கியமானது. வாழ்க்கையில் அனைத்தும் ஒரு ஒழுங்கில் இருக்கும். உடல்நிலை, மன நிலை, திறமை என அனைத்தும் பந்துவீச்சுக்கு முக்கியம் எனக் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார்.51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கி... மேலும் பார்க்க

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த விருத்திமான் சஹா!

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார்.இந்திய வீரரான விருத்திமான் சஹா, 141 முதல் தர போட்டிகளில் விளையாடி 7,169 ரன்கள் குவித்துள்ளா... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் பெத் மூனி சாதனை மேல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக நடை... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!

மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடை... மேலும் பார்க்க

ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா

இந்திய அணியின் வெற்றிக்காக ரன்கள் குவிப்பது மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று (ஜனவரி 31) புண... மேலும் பார்க்க