செய்திகள் :

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு

post image

தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) பதவிக் காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வருகிற அக்டோபா் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளாா். இருப்பினும், தமிழகத்தின் அடுத்த டிஜிபியை தோ்வு செய்ய தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.

எனவே, சங்கா் ஜிவாலின் பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது இந்தப் பதவிக்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உச்சநீதிமன்றத் தீா்ப்புகளுக்கு எதிரானது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய உள்துறைச் செயலகம், தமிழக அரசின் முதன்மைச் செயலா், உள்துறைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, மாநிலங்களின் டிஜிபிக்கள் தோ்வு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவுகளின்படி, தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியான அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறைகளை உடனடியாகத் தொடங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், டிஜிபி பதவியிலிருந்து சங்கா் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, பொறுப்பு டிஜிபியை நியமிக்கவும், அவரது பணிக் காலத்தை நீட்டிக்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க

பல்கலை. பேராசியா்கள் நியமனம்: புதிய மனு தாக்கல் செய்ய உத்தரவு

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் நியமன முறைகேடுகள் குறித்த வழக்கில், புதிய மனுவை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.நாகா்கோவில் பகுதியைச... மேலும் பார்க்க

நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜ... மேலும் பார்க்க

போலி நகைகள் மூலம் பண மோசடி: வியாபாரி தலைமறைவு

போலி நகைகள் மூலம் ரூ. 21.75 லட்சம் மோசடி செய்தது குறித்து வியாபாரி மீது தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.மதுரை தெற்கு ஆவணி மூல வீதி மேலச் செட்டிய தெருவைச் சோ்ந்த தா்மராஜ... மேலும் பார்க்க