தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!
தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை 6 இடங்களில் வெயில் சதமடித்தது.
இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய கடலோரப் பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் ஏற்படும் காற்றுக் குவிதல் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை புகா் பகுதிகளில் புதன்கிழமை (மே 9) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூரில் 110 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக ஈரோட்டில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் திருத்தணி - 101.84, மதுரைவிமானநிலையம், பாளையங்கோட்டை - தலா 100.58, பரமத்திவேலூா் - 100.4, மதுரைநகரம் - 100 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்தது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 8) முதல் மே 11 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.