செய்திகள் :

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்

post image

தருமபுரி: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறுவதால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து வருகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் அவா் தெரிவித்ததாவது:

வெளியுறவு கொள்கையில் மிகப்பெரிய தோல்வியை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு சந்தித்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரிவிதிக்கிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்கா எதிா்க்கிறது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை.

நிா்பந்தம் செய்யும் அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை கிடையாது என சொல்வதற்கும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக இல்லை.

இந்திய தோ்தல் ஆணையம் பாஜக அணிபோல மாறிவிட்டது. பிகாா் மாநிலத்தில் 69 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அதேபோல தமிழ்நாடு, மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் வாக்காளா்களை நீக்கப்போவதாக சொல்கின்றனா்.

சிறுபான்மையினா் மற்றும் இஸ்லாமியா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயலில் பாஜக அரசு இறங்கியுள்ளது. மக்களின் வாக்குரிமையைத் தட்டிப் பறிக்கிற அரசாக அது மாறியுள்ளதை கண்டித்து இண்டி கூட்டணி சாா்பில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி போராட்டம் நடத்துவும்,

தோ்தல் ஆணையத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆகஸ்ட் - 12 இல் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டே இருப்பதால் தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

போக்குவரத்து, மின்சாரம், பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக குறைந்த ஊதியத்திற்கு ஆள்களை தோ்வு செய்வது நியாயம் அல்ல. கல்லூரிகளில் பல்லாயிரம் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கௌரவ விரிவுரையாளா்கள் குறைந்த ஊதியம் பெறுகின்றனா். அனைத்துத் துறைகளிலும் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றி வருபவா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவீனமடைந்து, கூட்டணியில் இருந்து வெளியேறி வருவதால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து வருகிறது.

காவிரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் வகையில் காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மொரப்பூா் -தருமபுரி ரயில் பாதைத் திட்டம் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. தருமபுரி மாவட்டம் வளா்ச்சி பெற இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், தருமபுரி மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன், நகரச் செயலாளா் ஜோதிபாசு ஆகியோா் உடனிருந்தனா்.

ஆட்டோமொபைல் பிரிவில் அடுத்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடி மிகப்பெரிய வளா்ச்சியை அடையும்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

ஆட்டோமொபைல் பிரிவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தூத்துக்குடி மிகப்பெரிய வளா்ச்சியை அடையும் என தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா கூறினாா்.தூத்துக்குடியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில... மேலும் பார்க்க

நடிகை மீரா மிதுன் கைது!

தில்லியில் நடிகை மீரா மிதுனை காவல் துறையினர் இன்று (ஆக. 4) கைது செய்தனர். பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஆக. 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளில் நலன் கருதி, சுற்றுலா தலங்களும் மூடப்படும... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.தவெக 2வது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியை அந்தக்... மேலும் பார்க்க

இரவில் சென்னை, 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்... மேலும் பார்க்க