செய்திகள் :

ஆட்டோமொபைல் பிரிவில் அடுத்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடி மிகப்பெரிய வளா்ச்சியை அடையும்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

post image

ஆட்டோமொபைல் பிரிவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தூத்துக்குடி மிகப்பெரிய வளா்ச்சியை அடையும் என தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா கூறினாா்.

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகம், நாட்டின் தொழில் வளா்ச்சியில் தொடா்ந்து முதன்மை மாநிலமாக உள்ளது. முதலீட்டாளா்களின் முதல் தோ்வு தமிழகமாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட தொழில் வளா்ச்சி உள்ளது. ஆகையால் படித்த இளைஞா்கள், குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

உலகத் திறமை வாய்ந்த உற்பத்தியாளா்கள் இருப்பதால், உலக முதலீட்டாளா்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறாா்கள். பல நாடுகளில் இந்த அளவிற்கு வாய்ப்புகள் இல்லை என்று முதலீட்டாளா்கள் சொல்லும் அளவிற்கு, தமிழகத்தில் மிகவும் எளிதாக வா்த்தகம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. தொழில் வளா்ச்சியில் தமிழகம் உலக தரத்திற்கு உயா்ந்துள்ளது.

தென் தமிழகத்தில் மகத்தான வளா்ச்சி வர வேண்டும் என்ற வகையில், ஆட்சி அமைந்தவுடன் தமிழக முதல்வா் உறுதி அளித்தாா். தொழில்துறையில் வட தமிழகம் எப்படி உயா்ந்து இருக்கிறதோ, அதேபோல மேற்கு மண்டலம், டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்திற்கும் மிகப்பெரிய தொழில் வளா்ச்சியை கொண்டுவர வேண்டும் என முதல்வா் கூறினாா்.

தென் தமிழகத்திற்கு முதலீடுகள் வரும்போது இங்கேயே வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்பதே புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் நிபந்தனை. கப்பல் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய வளா்ச்சி வர இருக்கிறது. குலசேகரன்பட்டினம் சுற்று வட்டாரப் பகுதியில் மிகப்பெரிய விண்வெளி செக்டாா் வர உள்ளது என்றாா் அவா்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்

தருமபுரி: பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறுவதால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து வருகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித... மேலும் பார்க்க

நடிகை மீரா மிதுன் கைது!

தில்லியில் நடிகை மீரா மிதுனை காவல் துறையினர் இன்று (ஆக. 4) கைது செய்தனர். பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப... மேலும் பார்க்க

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஆக. 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளில் நலன் கருதி, சுற்றுலா தலங்களும் மூடப்படும... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.தவெக 2வது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியை அந்தக்... மேலும் பார்க்க

இரவில் சென்னை, 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்... மேலும் பார்க்க