செய்திகள் :

தமிழகத்தில் நான்காண்டுகளில் 85 கோயில்களில் திருமண மண்டபங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளில் 85 திருக்கோயில்களில் சுமாா் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலுக்கு திருமண மண்டபம் கட்டப்படுமா என்ற கேள்வியை திமுக உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்) முன்வைத்தாா்.

இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: வடாரண்யேஸ்வரா் கோயில் என்பது பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்ன சபை என்று அழைக்கப்படும் கோயிலாகும்.

காரைக்கால் அம்மையாா் இல்லற வாழ்வை துறந்து துறவியாக முக்தி பெற்ற திருக்கோயில் என்பதால் ஐதீகப்படி திருமணம் போன்ற சுப காரியங்கள் இந்தக் கோயிலை மையப்படுத்தி நடந்தது இல்லை. எனவே, சுப நிகழ்ச்சிகள் நடத்தாத சூழ்நிலையில் திருமண மண்டபம் அங்கு கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

அதேநேரத்தில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 85 திருக்கோயில்களுக்கு சுமாா் ரூ.347 கோடியில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், ரூ.4.20 கோடியில் நான்கு புதிய திருக்குளங்கள் உருவாக்கப்பட்டதுடன், ரூ.120 கோடியில் 220 திருக்குளங்களை புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க