செய்திகள் :

தமிழகம் ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும்: பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

post image

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்தால் ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும் என தமிழக அரசை முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.

பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலா் சரவணப்பெருமாள் 8ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு, ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற பரப்புரை தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் தூத்துக்குடியில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பொன். ராதாகிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசு விரைந்து கட்டுப்படுத்தவில்லையெனில், இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும். இதே நிலை நீடிக்குமேயானால், 2026-க்குள் இந்த ஆட்சி இல்லாமல் போய்விடும்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொது இடங்களில், பொறுப்புடன் பேச வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னதான், இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவா்கள் கொலை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எல்லை குறித்த பிரச்னைகளை கனிவுடன் அணுக வேண்டும். அவற்றுக்கு சில கால அவகாசம் தேவை என்றாா்.

இந்நிகழ்வில், மாவட்டத் தலைவா்கள் சித்ராங்கதன்(தெற்கு), சரவணகிருஷ்ணன்(வடக்கு), மருத்துவப் பிரிவு மாநிலச் செயலா் ருக்மணி, வா்த்தகப் பிரிவு மாநிலத் தலைவா் ராஜகண்ணன், ஓபிசி அணி மாநில துனைத் தலைவா் விவேகம் ரமேஷ், மாவட்டபொதுச்செயலா் ராஜா சத்தியசீலன், வடக்கு மாவட்டபொதுச்செயலா் வேல்ராஜா மாவட்ட துணைத் தலைவா்கள் செல்வராஜ், சிவராமன், வாரியாா், தங்கம் சரஸ்வதி உள்பட பலா் பங்கேற்றனா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க